எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்கு பதில் செல்லுங்கள் – கமல்ஹாசன்

எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில், மீனவர்களை காவு வாங்கும் தேங்காப்பட்டினம் துறைமுகத்தின் கட்டுமான தவறுகளை அரசு சரி செய்து கொள்ள வேண்டும் எனும் நியாமான கோரிக்கைகள் இன்னுமும் நிறைவேற்றப்படவில்லை. பார்வையிட சென்ற என்னை காவல்துறை அனுமதிக்க மறுத்ததால், ஊர் பெரியவர்களுடன் சேர்ந்து நடந்து சென்றேன். முட்டாள் தனமான அந்த கட்டுமானத்தால் உயிர்கள் பலியானதை ஊரார் … Read more

எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான்- ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான். நிரந்தரம் என்பது எதிலும் இல்லை, யாரும் கிடையாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் பேச்சு. சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் 4வது நாளாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நெல்லை கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அப்போது நாகர்கோவிலில் பேசிய கமல்ஹாசன், எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான். நிரந்தரம் என்பது எதிலும் இல்லை, யாரும் கிடையாது. … Read more

ஜனவரியில் கூட்டணி அறிவிப்பு.,எம்.ஜி.ஆருக்கு பிறகு கேப்டன் தான் – பிரேமலதா விஜயகாந்த்

எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரு புரட்சி தலைவர் என்றால் அது கேப்டன் தான் என்று மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வரும் தேர்தல் தமிழகத்தின் முக்கிய தேர்தல், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் விஜயகாந்த் நிச்சயம் … Read more

திருச்சியில் திரையிடப்பட்ட எம்ஜிஆரின் ‘உரிமைக்குரல்’.! ஆர்வத்துடன் கண்டு களித்த ரசிகர்கள்.!

திருச்சியில் 8 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட பேலஸ் திரையரங்கில் எம்ஜிஆரின்’உரிமைக்குரல்’ படம் திரையிடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது . இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க தொடங்கியுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புது திரைப்படங்கள் வெளியிடப்பட மாட்டாது என்று கூறப்பட்டது . எனவே பல தியேட்டர்களில் பழைய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றது . அதன்படி திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள பேலஸ் திரையரங்கில் … Read more

திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!

திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி. ஆம்பூர் நகர கழக இணை செயலாளர் லலிதா அன்பரசன் அவர்களின் மகனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், வணிகவரி மற்றும் பத்திர பதிவு அமைச்சர் kc.வீரமணி அவர்கள் கலந்து கொண்டார். இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் வீரமணி, பாடகர் குழுவுடன் இணைந்து புரட்சி தலைவர் எம்ஜிஆ-ரின் பாடலான ‘நாளை நமதே’ என்ற பாடலை பாடி தொண்டர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் … Read more

பாஜக-வின் விளம்பரத்தில் எம்.ஜி.ஆர் புகைப்படம்! எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுக!

பாஜக-வின் விளம்பரத்தில் எம்.ஜி.ஆர் புகைப்படம். பாஜக சார்பில், நவ.6-ம் தேதி வெற்றிவேல் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், இதற்கான வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில், ‘பொன்மனச் செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமடா’ என்ற வரிகள் தொனிக்க, இதில் பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர் புகைபபடம் இடம்பெற்றுள்ளது. இதற்க்கு அதிமுக சார்பில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதுகுறித்து அஇஅதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அவர்கள் கூறுகையில், ‘அனைத்து மக்களும் எம்.ஜி.ஆரை போற்றுவார்கள். ஆனால், பிற காட்சிகள் எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது … Read more

எம்.ஜி.ஆர். சகோதரர் மகன் கொரோனாவால் உயிரிழப்பு..முதலவர் மற்றும் துணை முதல்வர் இரங்கல்.!

எம்.ஜி.ஆர் சகோதரர் சக்ரபாணியின் மகன் கொரோனாவால் உயிரிழந்ததற்கு  தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். சகோதரர் சக்கரபாணியின் மகன் சந்திரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் சக்கரபாணியின் மகன் மறைவு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், கழக நிறுவனத் தலைவர், பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் சகோதரர் … Read more

மதுரையில் விஜய் – சங்கீதா திருமண நாளை முன்னிட்டு எம்ஜிஆர் – ஜெயலலிதாவாக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்ட்ரால் பரபரப்பு.!

மதுரையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சங்கீதாவை ஜெயலலிதா போலவும், விஜய் அவர்களை எம் ஜி ஆர் போலவும் சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்ர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தளபதி ரசிகர்கள் விஜய்யின் எந்தவொரு ஸ்பெஷல் தினத்தையும் போஸ்ட்ர் ஒட்டி கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை … Read more

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான் – வைரமுத்து

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். அண்மையில் புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம்  வெளியிட்டது. பதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்  கடும் எதிர்ப்பு கிளம்பியது.பின்  3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை … Read more

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ய அதிமுக அரசு துணிந்துவிட்டதா? மு.க.ஸ்டாலின் கேள்வி

புதிய கல்விக்கொள்கையை எதிர்க்காமல் – எம்ஜிஆர் அவர்கள் & ஜெயலலிதாவிற்கு  துரோகம் செய்யத் துணிந்துவிட்டதா அதிமுக ? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் எதேச்சதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு, திட்டமிட்டு பல்வேறு உள்நோக்கங்களுடன் திணிக்கின்ற புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும் – சமூகநீதிக்கும் – இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் – எதிராக இருப்பதுடன், இந்திய … Read more