#BREAKING: லாலு பிரசாத்தின் முன்னாள் உதவியாளர் கைது!

பீகார் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் முன்னாள் உதவியாளர் போலா யாதவை சிபிஐ கைது செய்தது. பீகார் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, அவரிடம் சிறப்புப் பணி அதிகாரியாக (ஓஎஸ்டி) இருந்த போலா யாதவை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்தது. லாலு பிரசாத் அமைச்சராக இருந்தபோது நடந்த பணி நியமன முறைகேடு வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ரயில்வே ஆள்சேர்ப்பு ஊழல் வழக்கில் கைது … Read more

#Breaking:முன்னாள் முதல்வர் தொடர்புடைய 17 இடங்கள் – சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு!

பீகார் மாநில முன்னாள் முதல்வரும்,ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய டெல்லி மற்றும் பீகார் உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே,139 கோடி டொராண்டா கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ராஞ்சியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதித்தது. இதனைத் தொடர்ந்து,கால்நடைத் தீவன … Read more

#BREAKING: முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்திற்கு ஜாமீன்..!

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனாலும், தும்கா கருவூல வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் அவர் சிறையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் தான் குற்றவாளி ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…!!

கால்நடை தீவன முறைகேடு 4 ஆவது வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி : ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இதே கால்நடை தீவன முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா குற்றவாளியில்லை என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்பளிக்கபட்டுள்ளதால் … Read more

ரூ.8000 கோடி பணப்பரிவர்த்தனை செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பாரதி மீது வழக்கு பதிவு…!!

சட்ட விரோதமாக ரூ.8000 கோடி பணப்பரிவர்த்தனை செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பாரதி மீது மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.இதனை தொடர்ந்து மத்திய அமலாக்கத்துறையின் கூடுதல் குற்றப்பத்திரிகையில் அவர்கள் இருவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.