தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் இதை செய்யுங்கள் – சித்த ராமையா கோரிக்கை

தமிழ்நாட்டை போலவே மத்திய அரசுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற சித்த ராமையா அம்மாநில சட்டமன்றத்தில் கோரிக்கை. கர்நாடக மாநில சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது சிறப்பு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்த எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா, சிஏஏ, வேளாண் சட்டங்கள் மற்றும் தேசிய கல்விக்கொள்கை ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும் என்றும் எரிபொருள் விலை குறைப்பு உள்ளிட்ட 13 கோரிக்கைகளை பேரவையில் வலியுறுத்தினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தமிழ்நாடு … Read more

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த காங்கிரஸ் உறுப்பினர்..!

கர்நாடக சட்டப்பேரவை கூட்ட தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் ரத்தோட்  நேற்று சட்டப்பேரவையில் தனது மொபைல் போனில் ஆபாச வீடியோக்களையும், போட்டோக்களையும் பார்த்துள்ளார். மக்கள் பிரச்சனையை பற்றி விவாதிக்க வேண்டிய அவையில், இப்படி பொறுப்பற்ற முறையில் செல்போனில் ஆபாச வீடியோ பார்ப்பது என்பது என பாஜக உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய … Read more

கர்நாடக சட்டமன்றத்தில் மூன்று மணி நேரத்தில் நில திருத்த மசோதா உள்ளிட்ட  9 மசோதாக்கள் நிறைவேற்றம்

வெறும் மூன்று மணி நேரத்தில், கர்நாடக சட்டமன்றத்தில்  நில வருவாய் (திருத்த) மசோதா உள்ளிட்ட  ஒன்பது மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா கர்நாடக நில சீர்திருத்த (திருத்த) மசோதா 2020 ஐ தாக்கல் செய்தார்.  மசோதாவைத் தாக்கல் செய்து  , ​​அசோகா பேசுகையில் , “இந்த மசோதா ஒரு அரக்கன் அல்ல. உண்மையில், இது மாநிலத்தில் விவசாயத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும். தேவையற்ற முறையில் எதிர்க்கட்சிகள்  இந்தத் திருத்தம் தொழிலதிபர்களுக்கு உதவுவதாக கூற முயற்சிக்கின்றனர். … Read more

தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் !உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்த எம்எல்ஏ

கர்நாடகாவில் நாளுக்கு நாள் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது.அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை 17 எம்எல்ஏக்கள் திரும்பப்பெற்றனர். இதனால் கடந்த  சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு தோல்வி அடைந்தது. ஆனால் எடியூரப்பா தலைமையிலான பாஜக பெரும்பான்மையை நிரூபித்தது.இதன் பின்னர் ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு … Read more

சித்தராமையாதான் எங்கள் ராஜினாமாவிற்கு காரணம் என பல்டி அடித்த அதிருப்தி எம்எல்ஏக்கள்! அதிரும் கர்நாடக அரசியல் களம்!

கர்நாடகா சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் மஜக கட்சி கூட்டணியில் ஆட்சி புரிந்து வந்த நிலையில் திடீரென ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், அதன் பிறகான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் அரசு தோற்று தற்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சி ஆட்சிஅமைத்துள்ளது. இந்நிலையில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களில் ஒருவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கூறித்தான் நாங்கள் ராஜினாமா செய்தோம். பாஜகவுக்கும் இந்த ராஜினாமாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை’ என கூறிவிட்டு சென்றார். இதற்க்கு சித்தராமையா, ‘ … Read more

பெயரில் திருத்தம் கொண்டுவந்தாலாவது ஆட்சி காலம் நீடிக்குமா?! எழுத்துக்களை மாற்றிய எடியூரப்பா!

கர்நாடக முதலைவராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எடியூரப்பா.  இதற்க்கு முன்னர் பதவி வகித்த மூன்று தடவையும் முழுதாக ஆட்சியில் இல்லாமல் இடையிலேயே முதலமைச்சர் பதவி பறிபோனது குறிப்பிடத்தக்கது. தற்போது எடியூரப்பா, ஆளுநருக்கு ஆட்சியமைக்க உரிமைகோரி அனுப்பப்பட்ட கடிதத்தில் தனது பெயரில் உள்ள ஆங்கில எழுத்துக்களில் மட்டும் மற்றம் கொண்டு வந்துள்ளார். அதாவது, அவரது இதற்க்கு முன்னர் Yeddyurappa என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த உரிமை கோரும் கடிதத்தில், Yediyurappa என மாற்றம் செய்துள்ளார். இப்படி மாற்றம் செய்த … Read more

கர்நாடக முதல்வராக பதவியேற்க போகும் எடியூரப்பாவிற்கு ஆளுநர் கெடு!

கர்நாடகவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி கவிழ்ந்ததை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு அமைய உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இது குறித்து ஆளுநரை சந்தித்து உரிமை கோரியுள்ளார் எடியூரப்பா. இன்று மாலை 6 மணிக்கு முதல்வராக எடியூரப்பா மட்டும் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூலை 31 ஆம் தேதிக்குள் பாஜக தலைமையிலான எடியூரப்பா அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜூபாய் … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்துங்கள் – சபாநாயகரிடம் ஆளுநர் வேண்டுகோள்

கர்நாடகா சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் களோபரமாக நடந்து வருகிறது.  இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் அவையில் பேச்சுவார்த்தை மட்டும் நடைபெற்றதால் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தனர். அதில், ‘ சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் ஒருவருக்கொருவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், சபாநாயகர் நேரம் கடத்துவதையே குறியாக வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஆளுநர், சபாநாயகருக்கு, … Read more

எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை ஏற்க கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது! – கர்நாடக சபாநாயகர் பதிலடி!

கர்நாடக சட்டமன்ற அரசியல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. இதுவரை கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தங்களது ராஜினாமாவை அளித்துள்ளனர். மேலும் இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக கொடுத்த வாக்கை வாபஸ் பெற்றுள்ளனர். இந்த விவகாரத்தில் கர்நாடக சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என 10 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி கூறுகையில், ‘ கர்நாடகா சபாநாயகர் இந்த ராஜினாமாக்கள் குறித்த இன்றே … Read more

ராஜினாமா கடிதம் அளித்த 13 எம்.எல்.ஏக்களில் 8 பேரின் கடிதம் சட்டப்படி சரியானதாக இல்லை-சபாநாயகர் ரமேஷ் குமார்

கர்நாடக அரசியலில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள்    ராஜினாமா கடிதம் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .இதனால் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள  அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மீதமுள்ள எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள். இந்த நிலையில் கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக ஆளுநருக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், ராஜினாமா கடிதம் அளித்த 13 எம்.எல்.ஏக்களில் 8 பேரின் கடிதம் சட்டப்படி … Read more