கர்நாடக முதலைவராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எடியூரப்பா. இதற்க்கு முன்னர் பதவி வகித்த மூன்று தடவையும் முழுதாக ஆட்சியில் இல்லாமல் இடையிலேயே முதலமைச்சர் பதவி பறிபோனது குறிப்பிடத்தக்கது.
தற்போது எடியூரப்பா, ஆளுநருக்கு ஆட்சியமைக்க உரிமைகோரி அனுப்பப்பட்ட கடிதத்தில் தனது பெயரில் உள்ள ஆங்கில எழுத்துக்களில் மட்டும் மற்றம் கொண்டு வந்துள்ளார். அதாவது, அவரது இதற்க்கு முன்னர் Yeddyurappa என குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால் அந்த உரிமை கோரும் கடிதத்தில், Yediyurappa என மாற்றம் செய்துள்ளார். இப்படி மாற்றம் செய்த பின்னராவது முழுதாக ஆட்சி காலத்தை கடந்து விடுவாரா என பொறுத்து இருந்து பார்க்கலாம்.