கர்நாடக முதல்வராக பதவியேற்க போகும் எடியூரப்பாவிற்கு ஆளுநர் கெடு!

கர்நாடகவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி கவிழ்ந்ததை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு அமைய உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பதவி ஏற்க உள்ளார்.

இது குறித்து ஆளுநரை சந்தித்து உரிமை கோரியுள்ளார் எடியூரப்பா. இன்று மாலை 6 மணிக்கு முதல்வராக எடியூரப்பா மட்டும் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜூலை 31 ஆம் தேதிக்குள் பாஜக தலைமையிலான எடியூரப்பா அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.