நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம். சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் பொங்கல் சிறப்பு தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாக குற்றசாட்டினார். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வில் விலக்கு அளிப்போம் என கூறிய திமுக தற்போது அதை மறந்து செயல்படுவதாக தெரிவித்தார். அதிமுக … Read more

ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என யார் சொன்னது? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இல்லை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தமிழுக்கு எந்த தொண்டும் ஆற்றாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவித்துள்ளது திமுக அரசு. உண்மையிலேயே தமிழுக்கு தொண்டாற்றியது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தான் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என யார் சொன்னது? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அவர் தலைமறைவாக இல்லை என்றும் அவருக்கு … Read more

தீபா, தீபக்கிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை!

வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற தீபா, தீபக் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜெயக்குமார் கோரிக்கை. கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தீபக் மற்றும் தீபத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டு, அன்றே வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் போயஸ் கார்டன் இல்லம் தீபா, தீபக்கால் திறக்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம், … Read more

அதிமுக ஒரு எஃகு கோட்டை, எந்தக் கரையான்கள் வந்தாலும் அதனை அழிக்க முடியாது – ஜெயக்குமார்..!

கட்சியின் நிலைப்பாடு சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்பதே என  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் சசிகலாவிற்கோ, அவரது குடும்பத்தினருக்கோ இன்றைக்கும், என்றைக்கும் இடமில்லை. அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்பதில் தலைமை உறுதியாக உள்ளது. ஒருங்கிணைப்பாளரின் கருத்துக்கு எதிர் கருத்து சொன்னால் அது சரியாக இருக்காது. கட்சியின் நிலைப்பாடு சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்பதே. சசிகலாவுக்கு அதிமுகவில் எந்தக் காலத்திலும் இடமில்லை; அதிமுக என்பது … Read more

திமுககாரங்களே உங்கள் லட்சணம் தான் ஊருக்கு தெரியும் – ஜெயக்குமார் கடும் விமர்சனம்

திமுககாரங்களே கல்வெட்டை அகற்றுவதால் உங்கள் லட்சணம் தான் ஊருக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம். அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், முதல் படம் – அதிமுகவினர் செய்த வேலையை சொல்லும் கல்வெட்டு என்றும் 2-வது படம் – திமுகவினர் செய்த வேலை “கல்லை வெட்டு” எனவும் தெரிவித்த அவர், திமுககாரங்களே கல்வெட்டை அகற்றுவதால் உங்கள் லட்சணம் தான் ஊருக்கு தெரியும். நாங்கள் … Read more

நிறைவேற்றியதாக கூறும் 202 வாக்குறுதிகளை திமுக பட்டியலிட வேண்டும் – ஜெயக்குமார்

எதிர்பார்க்கப்பட்ட வாக்குறுதியான இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 தரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு. சென்னை எழும்பூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாமல் கண்துடைப்பு வேலையை செய்து வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாக்குறுதியான இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கொடுக்கவில்லை, மதத்தோரும் முதியவர்களுக்கு ரூ.1000 லிருந்து ரூ.1,500 அதுவும் கொடுக்கவில்லை. கல்விக்கடன் ரத்து, சிலிண்டர் மானியம் ரூ.100 தரவில்லை என்றும் பெட்ரோல் டீசல் ரூ.5 குறைப்பதாக கூறி ரூ.3 மட்டுமே … Read more

தம்பி பிடிஆருக்கு.. நான் அரசியலிலும் உங்களுக்கு அண்ணன் – நிதியமைச்சருக்கு, ஜெயக்குமார் கடிதம்!

பெரியவர், சிறியவர் பேதமின்றி ட்விட்டரில் அமர்ந்துகொண்டு வசைபாடுவதும் அந்த பதவிக்கு அழகல்ல என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடிதம். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தம்பி பிடிஆர்-க்கு என்று கூறி, தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருந்து கொண்டு அந்த பொறுப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதேச்சதிகாரத்துடனும், பெரியவர், சிறியவர் பேதமின்றி ட்விட்டரில் அமர்ந்துகொண்டு வசைபாடுவதும் அந்த பதவிக்கு அழகல்ல. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான் என்பது … Read more

பாமகவை தவிர, பிற கட்சிகளுடன் கூட்டணி தொடர்கிறது – ஜெயக்குமார்

ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொறுத்தளவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி எப்படி இருந்ததோ அதைபோல் தான் உள்ளது. பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், பாமகவை தவிர, பிற கட்சிகளுடன் கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் தொடர்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். இதனிடையே, தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக … Read more

பாமக எடுத்த முடிவு.. அது அவர்களுக்கு தான் இழப்பு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலில் அதிமுக ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பில்லை என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாட்டு மக்களுக்கு அதிமுக பல நன்மைகள் செய்துள்ளது. திமுக பொறுத்தவரை நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை முழுமையாக மொட்டை அடித்துவிட்டார்கள். இதன் தாக்கம் திமுகவுக்கு எதிராக உள்ளாட்சி தேர்தலில் இருக்கும். அதிமுகவின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லுவோம். பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு செய்துள்ளதால், எங்களுக்கு உள்ளாட்சி … Read more

முதல் நாள் முதல் காட்சி: தலைவி படத்தில் இருந்து இந்த காட்சிகளை நீக்கவேண்டும் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், எம்ஜிஆர் அவர்கள் அமைச்சர் பதவி கேட்பது போல் காட்சி வைத்துள்ளதை நீக்கவேண்டும் என ஜெயக்குமார் வலியுறுத்தல். சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு திரைப்படமான தலைவி திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தலைவி படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர். வரலாறு என்பது வரலாறாக தான் இருக்க வேண்டும். அதனை திருத்தி கூறுவது ஏற்க … Read more