ரஷ்யாவிலுள்ள கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – 3 நோயாளிகள் உயிரிழப்பு!

ரஷ்யாவில் உள்ள ரியாசான் நகரில் உள்ள கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் உள்ள மேற்கு பகுதியான ரியாசான் நகரில் உள்ள ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயை அணைக்க முயற்சிப்பதற்குள் … Read more

ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து எரிந்து, கடலில் மூழ்கியுள்ளது!

ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பலான கார்க் எனும் கப்பல் ஒன்று ஓமன் வளைகுடாவில் வைத்து தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதிலிருந்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இந்த மோதல் காரணமாக ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் சில ஆண்டுகளாக தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது. உலகின் முக்கியமான பல கப்பல்கள் செல்லக்கூடிய பாதையாகிய ஹார்முஸ் ஜலசதியில் … Read more

குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 18 பேரின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிதி – குஜராத் முதல்வர்!

குஜராத் பருச்சில் உள்ள மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குஜராத் முதல்வர் 4 லட்சம் நிதி உதவி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் குஜராத் பருச் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 70 பேர் சிகிச்சைக்காக இருந்த நான்கு மாடி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கிருந்த பல கொரோனா நோயாளிகள் புகை மற்றும் தீ காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 24 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து … Read more

குஜராத் மருத்துவமனையில் உள்ள ஐ.சி.யு வார்டில் தீ விபத்து -பத்திரமாக மீட்கப்பட்ட 16 கொரோனா நோயாளிகள்!

குஜராத்தில் உள்ள ஆயுஸ் எனும் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் உள்ள ஐ.சி.யு வார்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்த 16 கொரோனா நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனைகள் படுக்கை வசதி இல்லாத காரணங்களாலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க குஜராத்தில் உள்ள … Read more

காதலியையும், காதலியின் தாயையும் தீயிட்டு கொளுத்தி தானும் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்!

தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தனது காதலி மற்றும் காதலியின் தாயை தீயிட்டுக் கொளுத்தி தானும் தற்கொலை செய்து கொண்ட காதலன். சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி 2-வது தெருவில் வசித்து வரக்கூடிய வெங்கடம்மாள் என்பவரின் மகள் தான் ரஜிதா. வெங்கட்டம்மாளின் கணவர் வெங்கடேஷ் மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பதாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரது மகள் ரஜிதா கணவரின் வேலையை தொடர்ந்து செய்யும் படி வெங்கட்டம்மாள் வாங்கி கொடுத்துள்ளார். இருப்பினும் … Read more

பணத்துக்காக விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கடத்திவிட்டு, எரித்துக்கொலை செய்த இளைஞன்!

பணத்துக்காக விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கடத்திவிட்டு, எரித்துக்கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் மகபூப் என்னும் நகரில் கிருஷ்ணா காலனி எனும் பகுதியை சேர்ந்த ரஞ்சித் – வசந்தா ஆகியோரின் மகன் தான் ஒன்பது வயதுடைய தீட்சித். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் விளையாடிக்கொண்டிருந்த தீட்சித் இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என்பதால் பதற்றமடைந்து குழந்தையை தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அன்று இரவே அச்சிறுவனின் குடும்பத்தினர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் தீட்சித்தை தான் கடத்தி … Read more

மும்பை கடையில் சிறிய தீ விபத்து.!

மும்பையின், தாதர் பகுதியில் இன்று காலை ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்து, சரியாக காலை 7 மணியளவில் தாதர் அகர் பஜாரில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை, அறிந்த தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்களுக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், விபத்து குறித்து விசாரித்ததில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக … Read more

வஞ்சிகிறது அரசு… வைக்கோலுக்கு நெருப்பு வைத்த விவசாயிகள்…!

பஞ்சாப் மாநிலத்தில் வைக்கோலை விவசாயிகள் எரித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே புர்ஜ் கிராம விவசாயிகள் அனைவரும் வைக்கோல்களை எரித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.மேலும் இவ்வாறு எரிப்பதற்கு  அரசுதான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர். இவ்வாறு விவசாயிகள்  வைக்கோலுக்கு வைத்த நெருப்பினால் அங்கு புகை மண்டலம் சூழ்ந்து, காற்று மாசு ஏற்பட்டது. இது குறித்து பேசிய விவசாயிகள்  தங்களால் வைக்கோல்களை எடுத்துச் செல்ல முடியாது.இதற்கு அரசு உதவ வேண்டும். மேலும் விவசாயிகள், 2 முதல் 3 … Read more

காரை ஓட்ட கொடுக்காததால் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்!

சென்னை சைதாப்பேட்டை சின்னமலையை சேர்ந்தவர் டொமினிக். இவரது மகனான டார்வின் கடந்த 2 வருடங்களுக்கு முன்பதாக ஹூண்டாய் ஐ 20 காரை வாங்கியுள்ளார். டோமினிக் மனைவியின் தம்பி மகனான ஜர்வீஸ், இந்த காரை பார்த்ததும் அதில் ஏற விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் டார்வின் ஜர்வீஸை காரில் ஏறவும் ஓட்டவும் அனுமதி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கார் கண்ணாடியை அப்போதே அடித்து உடைத்துள்ளார் ஜர்வீஸ். இதனையடுத்து, இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் … Read more

மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபத்து… கட்சி நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதி…

நேற்று பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பாடியில் பாரதிய ஜனதா கட்சியின்  சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், இரண்டாயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கட்சி நிர்வாகியை வரவேற்று பட்டாசு கொளுத்தப்பட்டது. கேஸ் பலூன் மீது பட்டு வெடித்து சிதறியது. அப்போது, அங்கு நின்றிருந்த கட்சியினர் உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  அங்குள்ள தனியார் … Read more