ஆந்திர பிரதேசம் : கணவர் முன்பு கர்ப்பிணி பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல் ..!

ஆந்திர பிரதேசம் மாநிலத்திலுள்ள பாபட்லா மாவட்ட ரயில் நிலையத்தில் கணவன் முன்னிலையில் கர்ப்பிணி பெண் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு குண்டூரில் இருந்து கிருஷ்ணா மாவட்டத்திற்கு தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் குடிபோதையில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தகராறு செய்துள்ளது. அப்பொழுது கணவர் அவர்களை தடுக்க முற்பட்டபோது, 3 பேரும் சேர்ந்து கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பின் … Read more

குடும்ப தகராறு காரணமாக 4 வயது சிறுவனை கடத்தி, கொலை செய்த மாமா ….!

ஹைதராபாத்தில் குடும்ப தகராறு காரணமாக 4 வயது சிறுவன்  உறவினரால் கடத்தி, கொலை செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள மைலார்தேவ்பள்ளி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 4 வயது சிறுவனை அவரது உறவினர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார். ஆனால், சிறுவன் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் சிறுவனை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவன் நான்கு வயதேயானவர் என்பதால் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் … Read more

காரில் லிப்ட் கேட்ட 20 வயது இளம்பெண் – கடத்தி சென்று பலாத்காரம் செய்த இளைஞர்கள்!

உத்தரபிரதேசத்தில் காரில் லிப்ட் கொடுப்பதாக கூறி 20 வயது இளம்பெண்ணை இரண்டு இளைஞர்கள் கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகரை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை, அதாவது நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது லிப்ட் தருவதாக கூறிய இளைஞர்கள் காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது அந்த மாணவி காரில் இருந்த இளைஞர்களால்  கடத்தி செல்லப்பட்டு, அருகிலிருந்த ஒரு … Read more

பணத்துக்காக விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கடத்திவிட்டு, எரித்துக்கொலை செய்த இளைஞன்!

பணத்துக்காக விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கடத்திவிட்டு, எரித்துக்கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் மகபூப் என்னும் நகரில் கிருஷ்ணா காலனி எனும் பகுதியை சேர்ந்த ரஞ்சித் – வசந்தா ஆகியோரின் மகன் தான் ஒன்பது வயதுடைய தீட்சித். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் விளையாடிக்கொண்டிருந்த தீட்சித் இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என்பதால் பதற்றமடைந்து குழந்தையை தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அன்று இரவே அச்சிறுவனின் குடும்பத்தினர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் தீட்சித்தை தான் கடத்தி … Read more

கல்யாண பெண்ணை காரில் கடத்திய மர்ம கும்பல் – மதுரையில் நடந்த அசம்பாவிதம்!

கல்யாண பெண்ணை காரில் கடத்தி சென்ற மர்ம கும்பல். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் அருகே ஊர்சேரி எனும் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகள்தான் சங்கீதா. தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியன் வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு தன் சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது திடீரென காரில் வந்த மர்ம நபர்கள் சங்கீதாவின் சகோதரரை அடித்துவிட்டு சங்கீதாவை தூக்கி சென்றுள்ளனர். இதுகுறித்து சங்கீதாவின் சகோதரர் காவல் நிலையத்தில் … Read more

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணனை காரில் கடத்திய மர்ம கும்பல்.!

தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் காரில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் என்பவர் இருக்கிறார். இவர், இன்று காலை உடுமலைப்பேட்டையில் அன்சாரி வீதியிலுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்தார். அப்போது, காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அலுவலகத்திற்குள் நுழைந்து, கர்ணனை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர். அலுவலகத்திற்குள் புகுந்து உதவியாளரை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

17வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் கைது.!

17வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடிக்கு அருகேயுள்ள சிரிக்கோட்டையை சேர்ந்தவர் 27வயதான பழனிசாமி. இவர் தனது உறவினர் மகளான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகியுள்ளார். இதனையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் சிறுமி காணாமல் போயுள்ளார். உடனடியாக அவரது பெற்றோர்கள் காரைக்குடியில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் புகார் … Read more

2 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன்! பத்திரமாக மீட்ட காவல்துறையினர்

2 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்பு. நேற்று பெங்களூருவைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளான். இதனையடுத்து, அவனது பெற்றோரை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், சிறுவனை விடுவிக்க ரூ. 2 கோடி பிணையத் தொகையாக வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்ததோடு, மேலும், மிரட்டல் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கக் கூடாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், தங்கள் மகன் கடத்தப்பட்டது குறித்து சிறுவனின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.  இதனையடுத்து, பெங்களூருவின் … Read more

உ. பி-யில் 18வயது சிறுமியை கடத்தி விற்க முயன்ற 4 பேர் .!

உத்தரபிரதேசத்தில் 18வயது சிறுமியை 4 பேர் சேர்ந்து கடத்தி விற்க முயன்றுள்ளனர். உத்திரப் பிரதேசத்தில் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணத்திற்காக நான்கு பேர் கடத்தி சென்றுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி சீக்கிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 18 வயது சிறுமியை 1 ஆண் மற்றும் 3 பெண்கள் இணைந்து கடத்தியுள்ளனர். சிறுமிக்கு போதை பொருள் கொடுத்து கடத்தியதாக கூறப்படுகிறது. அதனையடுத்து கடத்தப்பட்ட சிறுமியை ஹரியானாவின் … Read more

இளம் பெண்ணை கடத்தி தலை முடி அறுக்கப்பட்டு, கையில் சூடு போட்டு சித்ரவதை செய்த மர்மநபர்கள்.!

தூத்துக்குடியில் மர்மநபர்கள் சிலர் கடத்திச் சென்றதாகவும், பின்னர் செட்டியாபத்து கிராமத்தில் உள்ள வீட்டின் முன்பு விட்டுச் சென்றதாகவும் தெரிகிறது. பின்னர் கண் திறக்க முடியாமல் சோர்ந்த நிலையில் காணப்பட்ட பெண், தலை முடி அறுக்கப்பட்டு, கையில் சூடு போட்ட காயங்களுடன் காணப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தை சேர்ந்த கணவன் சக்திவேல், மனைவி வசந்தா இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சக்திவேலை விட்டுப்பிரிந்த வசந்தா திருப்பூரில் தனியாக வசித்து வருகிறார். சக்திவேலின் ஒரு … Read more