சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு 1 லட்சம் பரிசு தரப்படும் – பாமக பிரமுகர் சர்ச்சை பேச்சு!

நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு 1 லட்சம் பரிசு தரப்படும் என பாமக பிரமுகர் சித்தமல்லி பழனிச்சாமி கூறியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியாகிய படம் தான் ஜெய்பீம். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும் அவர்களுக்கு நடக்கக்கூடிய அநீதியை குறித்தும் இந்த படத்தில் கூறப்பட்டிருக்கும். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு சில சமூகத்தினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து … Read more

அதிமுக கொடியை எல்லாரும் பயன்படுத்தலாம்…! – முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி

அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்தப் பொறுப்பில் இருந்தால் மட்டும்தான் நீங்கள் கட்சி கொடியை பயன்படுத்தலாம் என எங்காவது இருக்குதா? கடந்த ஜனவரி 27-ஆம் தேதி 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் சிறையில் இருந்து சசிகலா அவர்கள் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன் 20ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். … Read more

மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை!

மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வரிலால் மற்றும் அமைச்சர்கள் … Read more

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை நேற்று தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ரூ.2 கோடி மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட https://tnskill.tn.gov.in என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து தமிழக அரசு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு … Read more

திருப்பூரில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி- முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு!

திருப்பூரில் பணியின் போது லாரி மோதி உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபுவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளதார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம்-சென்னிமலை மாநில நெடுஞ்சாலையில் காங்கேயம் இடத்தில சோதனைச்சாவடியில் நேற்று நள்ளிரவில் கன்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் சென்றது. அப்பொழுது காங்கேயம் அடுத்த, திட்டுப்பாறை சோதனைச்சாவடியில் அந்த லாரியை மடக்கிப் பிடிக்க அங்கிருந்த போலீசார் முயற்சித்தனர். அங்கும் அந்த லாரி நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் சந்தேகமடைந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஆயுதப்படை … Read more

17வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் கைது.!

17வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடிக்கு அருகேயுள்ள சிரிக்கோட்டையை சேர்ந்தவர் 27வயதான பழனிசாமி. இவர் தனது உறவினர் மகளான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகியுள்ளார். இதனையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் சிறுமி காணாமல் போயுள்ளார். உடனடியாக அவரது பெற்றோர்கள் காரைக்குடியில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் புகார் … Read more

37 மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை! முதல்வர் முக்கிய முடிவு

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், முழு  ஊரடங்கு  உள்ளிட்டவைகள் குறித்து நாளை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலி வாயிலாக  அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை  நடைபெறும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான முதல்வரின் அவசர ஆலோசனை கூட்டத்தில் முக்கிய … Read more

அங்கீகாரம் ரத்து செய்யப்படும்-தனியார் மருத்துவமனைக்கு அரசு எச்சரிக்கை

தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று பகீரங்க எச்சரிக்கை  விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சில சிகிச்சைகளை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில்  தமிழக அரசு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிரடி சலுகை! மானியம் அறிவித்தார் முதல்வர்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு உபகரணங்கள் தயாரிக்கின்ற சிறு, குறு, பெரு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவைத் தடுக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் துறைகளின் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு உபகரணங்களை உற்பத்தி தொடர்பான சலுகை அறிவிப்புகளை தற்போது முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில் ‘கொரோனா … Read more

எதுக்கு?? ராணுவம் தேவையில்லை தமிழ்நாட்டுக்கு – தலைமைச் செயலாளர் தடாலடி

கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை  என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று அவருடைய மாளிகையில் சந்தித்த  தமிழக முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். முதல்வர் உடன் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உடன்  இருந்துள்ளனர். இந்த சந்திப்பிற்கு பிறகு  செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், மருத்துவர்களுக்கு N95 முகக்கவசம் அணிந்துதான் வேலைபார்க்க … Read more