அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணனை காரில் கடத்திய மர்ம கும்பல்.!

தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் காரில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் என்பவர் இருக்கிறார். இவர், இன்று காலை உடுமலைப்பேட்டையில் அன்சாரி வீதியிலுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்தார். அப்போது, காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அலுவலகத்திற்குள் நுழைந்து, கர்ணனை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர்.

அலுவலகத்திற்குள் புகுந்து உதவியாளரை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருப்பூர் எஸ்.பி. திஷா மிட்டல் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அமைச்சரின் உதவியாளர் கர்ணன் கடத்தப்பட்டது சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்துள்ளது. அதில், 4 இளைஞர்கள் அலுவலகத்திற்கு உள்ளே புகுந்து கர்ணனை காரில் கடத்தி செல்கின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்