காமராஜர் கட்டிய அணையை சீரமைக்க ரூ.10,000 நிதியளித்த மாணவர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகளை அப்பகுதி இளைஞர்கள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.அதில் அம்புலி ஆற்றில் காமராஜ் காலத்தில் கட்டப்பட்ட அணை ஓன்று பரம்பரிப்பு இன்றி உள்ளது.அந்த அணையையும் தற்போது அப்பகுதி இளைஞர்கள் சீரமைத்து வருகின்றனர். இந்த தூர்வாரும் பணிக்காக பல்வேறு தரப்பினர் தங்களால் முடித்த பண உதவி செய்து வருகின்றனர்.இந்நிலையில் கொத்தமங்கலம் மேற்கில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வரும் மாணவ ,மாணவிகள் தங்கள் உண்டியலில்  சேமித்து … Read more

” முல்லைபெரியாறில் அணை கட்டும் எண்ணமில்லை ” கேரள அரசு தகவல்…!!

கேரள முல்லைபெரியாறில் புதிய அணை கட்ட கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது.இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்கிரி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளா அரசு தரப்பில் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் எண்ணமில்லை. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு புதிய அணை கட்டலாமா என்ற ஆய்வு தான் நடத்தி வருகின்றோம்.அதுவும் மாநில அரசுக்குட்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஆய்வு நடத்தி வருகின்றோம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் … Read more

பாசனத்திற்காக வைகை அணை திறப்பு…!!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு, நான்கு மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வைகை பூர்வீக பாசனத்திற்காக வைகை அணை இன்று திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆறு நாட்களுக்கு 184 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற உள்ளன. இதன்மூலம், இரண்டாம் போக சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அமராவதி அணையில் சரிந்து வரும் நீர்மட்டம்….!!

அமராவதி அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது அமராவதி அணை. இந்த அணையின் தண்ணீரை ஆதாரமாகக்கொண்டு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள், நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெருகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டு பனிப்பொழிவு மற்றும் போதிய மழையின்மை காரணமாக அணையின் நீர் மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. 90 அடி கொண்ட இந்த அணையின் தற்போதைய நீர் … Read more

பிரேசில் அணை உடைப்பு….58 பேர் பலி , 300க்கும் மேற்பட்டோர் மாயம்…!!

பிரேசில் நாட்டில் உள்ள அணை உடைந்ததில் 58 பேர் பலியாகி 350 பேர் காணாமல் போயுள்ளனர். பிரேசில் நாட்டில் உள்ள புருமடின்ஹோ இடத்தில் இரும்பு தாது எடுக்கும் சுரங்கம் இருக்கின்றது. இதன் அருகில் பழமை வாய்ந்த அணை உள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று அணையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அப்போது அணையில் உடைப்பு பெரிதாகி அணையின் ஒருபகுதி உடைந்து தண்ணீர் சுரங்கம் முழுவதும் சூழ்ந்து கொண்டது.மேலும் அணையில் இருந்து வெளியேறிய நீர் அருகில் உள்ள விலை நிலங்கள் , பகுதிகளுக்கு சென்றது. இதையடுத்து இந்த … Read more

மேகதாது அணைக்கு எதிர்ப்பு..அதிமுகவினர் போராட்டம்….!!

மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து மேகதாதுவில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். கர்நாடக மேகதாது_வில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்த அனுமதியை இரத்து செய்ய கோரி தமிழக M.P_க்கள் மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசின் சார்பில் சட்ட பேரவையில் மேகதாது விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுளள்து. இந்நிலையில் மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து அதிமுகவினர் மேகதாதுவில் போராட்டம் நடத்த்தினர்.இந்த போராட்டத்தில் அவர்கள் கோரிக்கை பதாகைகளை கையில் … Read more

அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்ப்போம்…தமிழக முதல்வர் உறுதி..!!

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான  அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது  என்று, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற  சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் , அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். அணைகள்  பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை வேறு மாநிலத்தில் இருந்தால் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் கட்டுப்படுத்தும் என்று சுட்டிக் காட்டிய முதலமைச்சர், முல்லைபெரியாறு உள்ளிட்ட அணைகளின் மீதான தமிழகத்தின் உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக … Read more

முக்கொம்பு அணை உடைந்தது…….தமிகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..???உயர்நீதிமன்ற கிளை பளார்..!!

தமிழகத்தில் காவிரி, வைகை, தாமிரபரணி  உள்ளிட்ட அணைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன…என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.    சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரங்கசாமி என்பவர்  ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் உடைந்த முக்கொம்பு தடுப்பு அணையால் தஞ்சை, திருச்சி மாவட்ட விவசாயிகள் பெருமளவு பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையே அணையில் அருகே இருந்து அருகே மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கியது.இதனால் அங்கு மணல் அள்ளும் பணி சீரும் சிறப்பாக நடந்தது. … Read more

வருகிறது ஆபத்து..! கொள்ளிடம் ஆற்றின் புது பாலத்திலும் சேதம்.!!

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலம் அண்மையில் இடிந்து விழுந்த நிலையில் மண் அரிப்பு காரணமாக புதுப்பாலத்தின் தூண்களும் வெளியே தெரிவதால், பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 1928ஆம் ஆண்டு கட்டபட்ட இரும்புப் பாலத்தின் ஒருபகுதி அண்மையில் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அதன் அருகிலேயே கட்டப்பட்ட புதிய பாலத்தின் தூண்கள் தற்போது வெளியே தெரிவதாகக் கூறும் பொதுமக்கள், மணல் சுரண்டலே இதற்குக் காரணம் என்கின்றனர். 2015ஆம் … Read more

“69” முழு கொள்ளளவு அடியிலே இருக்கும் “வைகை”அணை..!!!திறப்பு..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. இந்த வருடம் தென்மேற்குப் பருவமழை நினைத்ததை விட அதிகமான மழைப்பொழிவை தந்ததால், ஏழு வருடங்களுக்குப் பிறகு வைகை அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியது. அது மட்டுமல்லாமல், 20 நாள்களுக்கு மேலாக அணையின் முழுக்கொள்ளளாவான 69 அடி நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகத் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில், இன்று (10/09/18) மாலை 6 … Read more