#BREAKING: பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழப்பு.!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் நெடுஞ்சாலை பாதுகாப்பில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் இன்று  திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.  சிஆர்பிஎஃப் மீதான பயங்கரவாத தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஒரு  சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து , இவர்களை பிஜ்பெஹாரா மருத்துவமனையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த குழந்தைக்கு ஆறு வயது என கூறப்படுகிறது. இதற்கிடையில், புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவின் டிரால் பகுதியில் … Read more

#BREAKING: காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள்  தாக்குதல்.!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் நெடுஞ்சாலை பாதுகாப்பில் நிறுத்தப்பட்டுள்ள சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்ததாகவும்  அவரை மாவட்ட மருத்துவமனை அழைத்து சென்றுதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.

ராக்கி கயிறு கட்டிய மாணவிகளுடன் செல்பி எடுத்த ராணுவ வீரர்கள் !

நேற்று 73-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதை தொடர்ந்து நாடு முழுதும் சகோதரத்துவ சகோதரத்துவத்தை போற்றும் வகையில் நேற்று ரக்ஷா பந்தன் விழாவும்  கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி பிரதமர் மோடிக்கு சிறுவர்கள் மற்றும்  பெரியவர்கள் என பலர் ராக்கி கட்டினர்.இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனோடு  ஒரு பகுதியில் உள்ள சிஆர்பி எஃப் வீரர்களுக்கு  ஏராளமான மாணவிகள் ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த ராக்கி கட்டும் நிகழ்ச்சியில் சிஆர்பி எஃப் வீரர்கள் கலந்துகொண்டு  ராக்கி … Read more

கல் வீச்சை எதிர்கொள்ள காவலர்களுக்கு சிறப்பு உடை – ஸ்ரீநகரில் அமல் !

ஜம்மு காஸ்மீர் மாநிலம் ஸ்ரீ நகர் பகுதியில் பணியில் இருக்கும் சி ஆர் பி எப் பெண் போலீசாருக்கு நவீன உடையும் வழங்கியுள்ளனர். ஸ்ரீ நகர் பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 300 பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுவர். அடிக்கடி கலவரங்கள் ஏற்படும் போது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதால் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களும் காயமடைகின்றனர். இந்நிலையில், காவலர்களது பாதுகாப்பிற்காக புதிதாக நவீன் பாதுகாப்பு ஆடை வழங்கியுள்ளனர். சி ஆர் பி எப் … Read more

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் சிஆர்பிஎஃப் வீரர் வீரமரணம்!! சிஆர்பிஎஃப் வீரர்கள் சிலர் படுகாயம்

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.  ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் சிஆர்பிஎஃப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.  கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் … Read more

புல்வாமா தாக்குதல் தொடர்பாக வெளியாகும் போலி செய்திகள்!!பதிவேற்றம், லைக்,ஷேர் செய்ய வேண்டாம்!! சி.ஆர்.பி.எப் எச்சரிக்கை

தாக்குதல் தொடர்பாக போலியான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு சி.ஆர்.பி.எப் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குல்:  கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  காஷ்மீரில் உள்ள ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது  புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் … Read more

பயங்கரவாதிகள் தாக்குதல் :இரண்டு சிஆர்பிஎப் வீரர்கள் காயம்…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தின் ககபுரா பகுதியில் சி.ஆர்.பி.எப் முகாம் உள்ளது. இந்த முகாம் மீது நேற்று இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதலில், முகாமில் இருந்த இரண்டு வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலையடுத்து, நிகழ்விடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் … Read more

நக்சலைட்டுகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திருக்கு ராஜ்நாத் சிங் இரங்கல் …!!

சத்தீஸ்கர் : சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டு தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

காஷ்மீரில் 37 மணி நேரமாக நடந்த என்கவுன்டர்! 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் …..

  காஷ்மீரின் தெற்கு பகுதியான புல்வாமா மாவட்டம் லித்தாபோரா என்ற பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ்படை முகாம் மீது கடந்த ஞாயிறன்று இரவு பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.உடனே  சுதாரித்துக்கொண்ட சி.ஆர்.பி.எப்.படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் கடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இவர்கள் இடையே நடந்த 37 மணி நேர துப்பாக்கிச் சண்டை நேற்று முடிவுக்கு வந்தது. இதில் 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இது குறித்து … Read more