Corona: சர்வதேச பயணிகளுக்கு கொரோனாவுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு

கொரோனா தொற்று சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் சர்வதேச பயணிகள் மற்றும் நுழைவுப் புள்ளிகள் (விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் நில எல்லை) ஆகியவற்றில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வழங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.இந்நிலையில் நிலைமையை ஆராய்ந்து, டிசம்பர் 24 முதல் நடைமுறைக்கு வரும் வழிகாட்டுதல்களை மையம் வெளியிட்டுள்ளது. விமானத்தின் … Read more

கொரோனா.. தேவையற்ற அச்சம் வேண்டாம் – முதலமைச்சர்

தற்போது தமிழ்நாட்டில் உள்ள கொரோனா தொற்று XBB வகையாகும் என்று சென்னை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உரை. புதிய வகை கொரோனா குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சப்பட வேண்டாம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பல்வேறு உத்தரவு மற்றும் அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக … Read more

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா? – மருத்துவ நிபுணர்கள் விளக்கம்!

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கொரோனவால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவ நிபுணர் எச்சரிக்கை. சீனாவை மீண்டும் மிரட்டி வரும் புதிய வகை கொரோனா பரவல், இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அந்தவகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவக்குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், அறிகுறி … Read more

வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்க உத்தரவு.! முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை குறிப்பாக நோய் தொற்று அதிகமாக பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.  அண்டை நாடான சீனா , ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் மனைலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இன்று, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் , தலைமை செயலர், சுகதர்துறை செயலர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று … Read more

#Breaking : இந்தியாவில் கண்டறியப்பட்ட புதியவகை ஒமிக்ரான் திரிபு.!

இந்தியாவில் 3 பேருக்கு ஒமிக்ரான் திரிபு வகை வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  சீனாவில் மீண்டும் தொடங்கிய புதிய வகை கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. புதிய வகை ஒமிக்ரான் வகை இந்தியாவில் 2 மாநிலங்களில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. குஜராத்தில் 2 பேருக்கும், ஒரிசாவில் ஒருவருக்கும் புதிய வகை ஒமிக்ரான் திரிபு BF.7 எனும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மீண்டும் முதல இருந்து!!! விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை.. இன்று முதல் அமல்!

சர்வதேச பயணிகளுக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை எடுக்கும் முறை மீண்டும் தொடக்கம். சீனா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவல் உருவெடுக்க தொடங்கி உள்ளன. இதில் நாட்டில் கணிக்கப்பட்ட மூன்றாவது அலைகளில் சீனா தற்போது முதல் இடத்தில் உள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் தெரிவித்திருந்தார். தற்போதைய மூன்றாவது அலை இந்த குளிர்காலத்தில் உச்சத்தை எட்டும் என்றும் எச்சரித்து உள்ளார். கொரோனா … Read more

நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுங்கள் மற்றும் தடுப்பூசி – அரசு அறிவுறுத்தல்

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனாவுக்கு மத்தியில் நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு குடிமக்களை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொடர்பான மத்திய சுகாதார அமைச்சரின் கூட்டத்திற்குப் பிறகு NITI ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் இது பற்றி கூறுகையில் , “கூடுதல் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு அல்லது அதிக வயதுடையவர்கள் தங்களை பாதுகாத்து கொள்வதில் முகக்கவசம் அணிவது மிகவும் முக்கியமானது என்றார். 27-28% மக்கள் மட்டுமே தடுப்பு மருந்துகளை  எடுத்துள்ளனர். மற்றவர்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள், முன்னெச்சரிக்கை அளவை எடுத்துக்கொள்ளுமாறு … Read more

கொரோனா புதிய அலை கவலையளிக்கிறது – ராமதாஸ்

கடந்த காலங்களில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என பாமக ராமதாஸ் தகவல். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் ஜப்பானில் 1.85 லட்சம், கொரியாவில் 87,559, பிரான்சில் 71,212, ஜெர்மனியில் 52,528 உட்பட உலகம் முழுவதும் 5,59,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா புதிய அலை கவலையளிக்கிறது. கடந்த காலங்களில் கொரோனாவால் மிக … Read more

கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது – விஞ்ஞானியின் அதிர்ச்சியூட்டும் தகவல்..!

மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க விஞ்ஞானி கருத்து.  கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது. இந்த வைரஸ் ஆனது முதன் முதலாக சீனாவின் உஹான் மாகாணத்தில் தான் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் தனது தாக்குதலை நடத்தி வந்தது. இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.  அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் எனபவர், வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் … Read more

உலகில் முதல்முறையாக மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி!

உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மருந்துக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாடு … Read more