தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா? – மருத்துவ நிபுணர்கள் விளக்கம்!

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கொரோனவால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவ நிபுணர் எச்சரிக்கை. சீனாவை மீண்டும் மிரட்டி வரும் புதிய வகை கொரோனா பரவல், இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அந்தவகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவக்குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், அறிகுறி … Read more

#BREAKING: பிப்.1 முதல் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறப்பு – தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் பிப். 1 ஆம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுவதாகவும், வரும் ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட கொரோனா கட்டுப்பாடுகள் மட்டும் வரும் 1 முதல் 15 வரை … Read more

நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

நாளை ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் பகல், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு உள்ள … Read more

#Breaking:ஊரடங்கு நீட்டிப்பு?…கூடுதல் கட்டுப்பாடுகள் – மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை!

சென்னை:தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை தமிழகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில்,ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை மேற்கொள்கின்றனர். அதன்படி,சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் … Read more

மக்களே…நாளை முழு ஊரடங்கு;கட்டுப்பாடுகள் என்னென்ன?..!

தமிழகத்தில் நாளை (9-1-2022) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு. உலக அளவில்,அமெரிக்கா,பிரான்ஸ்,இங்கிலாந்து,இத்தாலி,ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது.இந்தியாவில்,மகாராஷ்டிரா,மேற்கு வங்கம்,புது டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம்,புது டெல்லி,கேரளா,கர்நாடகா மாநிலங்களில் வேகமாகப் பரவி வரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்,தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் … Read more

#BREAKING : ஜனவரி 9ஆம் தேதி தான் கடைசி.! அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்.!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமல் என அரசு அறிவிப்பு. தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளில், அத்தியாவசிய பணிகளான பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். போன்ற முக்கியமான … Read more

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிப்பு – இன்று முதல் இதற்கெல்லாம் அனுமதி!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவு. தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 6 … Read more

இனி கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு ஊரடங்கில் புதிய தளர்வுகளை அளித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு 23-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக நீண்ட மாதங்களாக கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், தற்போது அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் அமைந்துள்ள … Read more

#BREAKING: ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிப்பு.., புதிய தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!!

தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீடித்து புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் தளர்வுகளுடன் செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், செப்டம்பர் 1 முதல் 9,10,11, 12 ம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்க … Read more

#BREAKING: ஊரடங்கு தளர்வுகள் – கல்லூரிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி?

தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா? என உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது, திரையரங்குகள் திறப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், … Read more