லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி… வளைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை! சிக்கியது எப்படி?

Enforcement Officer

திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சமாக ரூ.51 லட்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார். மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி, முதலில் ரூ.20 லட்சம் பெற்ற நிலையில், மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார்.  பணத்துடன் … Read more

சமுதாயத்தை கரையான் போல் ஊழல் செல்லரிக்க செய்துவிட்டது – உயர்நீதிமன்றம் வேதனை

சமுதாயத்தை கரையான் போல் ஊழல் செல்லரிக்க செய்துவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஊழல் வேர் பரவி கரையான் போல் சமுதாயத்தை செல்லரித்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது என்றும் ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அதிகாரிகள் கடமை எனவும் நிதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் ஆகியோர் ஆதங்கத்துடன் கருத்து கூறியுள்ளனர். மேலும், ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறுவோருக்கு … Read more

ரூ.4,000 லஞ்சம் கேட்ட மதுரை பில் கலெக்டர்..!-ரசாயனம் தடவிய பணத்தால் மாநகராட்சி ஊழியர் கைது..!

மதுரை மாவட்டத்தில் சொத்துவரி மதிப்பீடு செய்வதற்காக ரூ.4,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் லஞ்ச ஒழிப்பு துறையால் நூதன முறையில் பிடிபட்டு கைதாகியுள்ளார்.        மதுரை மாவட்டம் அழகப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் பரிமளா, இவரின் மகன் ஈசுவரபிரசாத். ஈசுவரப்பிரசாத்திற்கு(46) அந்த பகுதியில் சொந்தமாக 2 கடைகள் இருக்கிறது. மேலும் இவரது தாயார் பரிமளாவின் பெயரில் ஒரு குடோன் உள்ளது. அதனால் இவற்றை சொத்துவரி மதிப்பீடு செய்வதற்காக மதுரை தெற்கு மண்டல அலுவலகத்திற்கு சென்றுள்ளார். … Read more

லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் – இணையத்தில் வைரலாகிய வீடியோ!

இளம்பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியதையடுத்து அவர் மீது தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே எனும் மாவட்டத்தில் பெண் காவல் அதிகாரி ஒருவர் இளம்பெண் ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லஞ்சம் வாங்குவது தவறு என கூறினாலும், இன்னும் இந்தியாவில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் சரி, லஞ்சம் கொடுக்கும் பணம் படைத்தவர்களும் சரி திருந்தியபாடில்லை. தற்பொழுது மஹாராஷ்டிராவில் சாலையோரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த … Read more

இலவச மின்சாரம் பெற 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் பொறியாளர் கைது!

இலவச மின்சாரம் பெற 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிருஷ்ணகிரி பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்க கூடாது என்பது அரசு தனியார் என இரண்டு துறை அலுவலர்களுக்கும் விதிக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே கெலமங்கலத்தில் இலவச மின்சாரம் பெறுவதற்காக வெங்கடேசன் என்பவரிடம் 10,000 ரூபாயை லஞ்சமாக பெற்ற தென்னரசு எனும் மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆணையர் ! கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் ஆணையம் அதன் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றது.குறிப்பாக பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை  பறிமுதல் செய்து வருகின்றது. இந்நிலையில் … Read more