லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி… வளைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை! சிக்கியது எப்படி?

திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சமாக ரூ.51 லட்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார்.

மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி, முதலில் ரூ.20 லட்சம் பெற்ற நிலையில், மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார்.  பணத்துடன் காரில் தப்ப முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த நிலையில், அவரிடம் மாவட்ட எஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

உச்சநீதிமன்றம் கண்டனம்! 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல்!

திண்டுக்கல் தோமையார்புரம் அருகே லஞ்ச பணத்தை பெற்று காரில் வைத்து தப்ப முயன்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் மடக்கி பிடித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயன பவுடர் தடவிய பணத்தை மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அனுப்பியிருந்த நிலையில், லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி பிடிபட்டார்.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி ரூ.31 லட்சம் லஞ்சம் கேட்டது குறித்து மருத்துவர் சுரேஷ் பாபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார்.,  ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷிடம் கொடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கிட் திவாரியை வளைத்து பிடித்தனர். லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியிடம் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.

இதனிடையே, மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை திண்டுக்கலில் ரூ.31 லட்சம் லஞ்ச பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிடிபட்டதை அடுத்து. இந்த சோதனை நடைபெறுகிறது. அங்கித் திவாரியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்