சமுதாயத்தை கரையான் போல் ஊழல் செல்லரிக்க செய்துவிட்டது – உயர்நீதிமன்றம் வேதனை

சமுதாயத்தை கரையான் போல் ஊழல் செல்லரிக்க செய்துவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

ஊழல் வேர் பரவி கரையான் போல் சமுதாயத்தை செல்லரித்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது என்றும் ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அதிகாரிகள் கடமை எனவும் நிதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் ஆகியோர் ஆதங்கத்துடன் கருத்து கூறியுள்ளனர்.

மேலும், ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறுவோருக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது என்றும் சஸ்பெண்டுக்கு பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காததலால் காவல் அதிகாரி பாஸ்கரனை பணியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளது. ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து பாஸ்கரன் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்