#BREAKING: அதிமுக கொடிக் கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு!

அதிமுகவின் 100 அடி உயர கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்ததில் அதிமுக தொண்டர் ஒருவர் உயிரிழப்பு. சென்னையை அடுத்து மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், உள்ள அதிமுக கொடிக் கம்பத்தை கழற்றி மாட்டும் போது, கம்பம் தவறி விழுந்ததில் அதிமுகவைச் சேர்ந்த செல்லப்பன் என்பவர் உயிரிழந்தார். மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை கடந்த ஜூலை மாதம் ஏற்றி வைக்கப்பட்டது. இந்த 100 அடி உயர கம்பத்தில் பறந்த அதிமுக கொடியை மாற்றுவதற்காக … Read more

சசிகலாவுக்கு வழங்கிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.!

சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதை அடுத்து, உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என சசிகலாவிடம் நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நோட்டீஸ் வழங்கிய கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி கோரிய அறிவழகன் என்பவரிடம் நோட்டீஸ் கொடுக்காமல் சசிகலாவிடம் … Read more

தலைமை என்ன முடிவு எடுத்தாலும் சரி – சசிகலாவுக்கு கார் வழங்கிய அதிமுக நிர்வாகி

பெங்களூரில் இருந்து திரும்பிய சசிகலாவுக்கு தமிழகத்தில் நுழையும் போது அதிமுக கொடியுடன் உள்ள காரை வழங்கியது அதிமுக நிர்வாகி சம்பங்கி. பெங்களூரில் இருந்து காரில் சசிகலா புறப்பட்ட போது அவரதலைமை என்ன முடிவு எடுத்தாலும் சரி – சசிகலாவுக்கு கார் வழங்கிய அதிமுக நிர்வாகி து காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி அருகே சுவாமி தரிசனம் செய்த சசிகலா, பின்னர் தமிழகம் எல்லையான ஓசூர் ஜூஜூ வாடி வழியாக வந்தார். அப்போது காரில் … Read more

எல்லைக்கு முன்பு சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றம்.! மீண்டும் கொடியுடன் தமிழகம் எல்லைக்கு வந்த சசிகலா.!

பெங்களூரில் இருந்து புறப்படும் போது காரில் அதிமுக கொடியுடன் வந்த சசிகலா, தமிழகம் எல்லைக்கு முன்பு அதிமுக கொடி அகற்றப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலாவுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பெங்களுர் பண்ணை வீட்டில் தன்னை தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இன்று அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார். தமிழகம் வரும் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு … Read more

சசிகலா கொடியை பயன்படுத்த எந்த உரிமையும் இல்லை – அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பேட்டி

அதிமுக கொடியை தொண்டர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.  பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது.இது அரசியலில் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் காரில் அதிமுக கொடி இடம்பெற்றது  குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா … Read more

சசிகலா காரில் அதிமுக கொடி – அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார்

சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதால் அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சசிகலா காரில் அதிமுக கொடி :  பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது.இது அரசியலில் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தினகரன் கருத்து :  இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் … Read more

அதிமுக கொடியை எல்லாரும் பயன்படுத்தலாம்…! – முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி

அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்தப் பொறுப்பில் இருந்தால் மட்டும்தான் நீங்கள் கட்சி கொடியை பயன்படுத்தலாம் என எங்காவது இருக்குதா? கடந்த ஜனவரி 27-ஆம் தேதி 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் சிறையில் இருந்து சசிகலா அவர்கள் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன் 20ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். … Read more

அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான்., பொறுத்திருந்து பாருங்கள் – டிடிவி தினகரன்

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடந்த 11 நாட்கள் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள தேவனஹல்லி அருகே ஒரு பண்ணை வீட்டிற்கு சசிகலா சென்றுள்ளார். இங்கு ஒரு வாரம் ஓய்வு எடுத்த பிறகு சென்னை திரும்புவார் … Read more