சசிகலாவுக்கு வழங்கிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.!

சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதை அடுத்து, உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என சசிகலாவிடம் நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நோட்டீஸ் வழங்கிய கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி கோரிய அறிவழகன் என்பவரிடம் நோட்டீஸ் கொடுக்காமல் சசிகலாவிடம் நோட்டீஸ் வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்