Shocking : தீவிர சுய இன்பத்தில் ஈடுபட்டதால் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்ட 20 வயது இளைஞன்..!

ஸ்விஸ் நாட்டில் தீவிர சுய இன்பத்தில் ஈடுபட்டதால், ஸ்பான்டேனியஸ் நிமோமெடியாஸ்டினம் என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞன்.  ஸ்விஸ் நாட்டில் வின்டர்தூரில் உள்ள கன்டோனல் மருத்துவமனையில், 20 வயது இளைஞன் மூச்சுத் திணறல் மற்றும் உடல் முழுவதும் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞனுக்கு ஸ்பான்டேனியஸ் நிமோமெடியாஸ்டினம் என்ற பிரச்னை இருப்பதை கண்டறிந்தனர். இது நுரையீரலில் இருந்து காற்று கசிந்து விலா எலும்பில் அடைக்கப்படும் போது ஏற்படக்கூடிய ஒரு … Read more

சிறுவன் உயிரிழப்பு- ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி..!

தனியார் பள்ளி பேருந்து விபத்தில் கைதான ஓட்டுநர் பூங்காவனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் நேற்று காலை பள்ளி வேன் மோதி 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர், பேருந்திலிருந்து மாணவர்களை இறங்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று தனியார் பள்ளி பேருந்து விபத்தில் கைதான ஓட்டுநர் பூங்காவனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி திடீர் … Read more

கோவையில் பெண் மீது ஆசிட் வீசிய மர்மநபர்கள்..!

கோவையில் பெண் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசிய நிலையில், படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.  கோவை அம்மன் குளம் பகுதியை சேர்ந்த 34 வயது பெண் ராதா. தருமபுரியை சேர்ந்த இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ராதா மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசி விட்டு தப்பித்து சென்றுள்ளனர். இந்த ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த ராதா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண்ணொருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் … Read more

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் சென்ற கார் விபத்து..! அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..!

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் சென்ற கார் விபத்துக்குள்ளானது.  உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத், தலிசைனில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், பாபோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

சிறையில் பப்ஜி மதனுக்கு உடல்நலக்குறைவு..! மருத்துவமனையில் அனுமதி..!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதன், முதுகு வலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  யூ -டியூப்பில் ஆபாசமான பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் மதன் மீது கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு,அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். … Read more

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி…!

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அவர்கள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அவர்கள் மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடியாக இருந்து வரும் நிலையில் சமூக பிரச்சினைகளுக்காக அவ்வப்போது உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபடுவது உண்டு. இந்நிலையில் 84 வயதாகும் அன்னா ஹசாரேவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் புனேவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது … Read more

அண்ணன் கமலஹாசன் அவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் – சீமான்

அண்ணன் கமலஹாசன் அவர்கள் விரைந்து முழு உடல்நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமென விழைகிறேன் என சீமான் ட்வீட். நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடபட்டது. இந்நிலையில், … Read more

நடிகர் ரஜினிகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி. இது குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறுகையில், ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வருடத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்வது வழக்கம், ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என தெரிவித்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர்கள்…!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  கும்பகோணத்தில், பொற்தாமரை குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த மேற்கு காவல்நிலைய முதல்நிலை காவலர் சுகுணா பார்த்துள்ளார். பின் அந்த பெண்ணுக்கு  சுகுனாவும், சக பெண் காவலர்களும் பிரசவம் பார்த்தனர். பின் தாயையும், சேயையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, இந்நிலைமைக்கு ஆளாக்கிய பாலக்கரையை சேர்ந்த ஜான் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். … Read more

புதுச்சேரி சபாநாயகருக்கு திடீர் நெஞ்சுவலி…! மருத்துவமனையில் அனுமதி…!

புதுச்சேரி சபாநாயகர் செல்வம் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதி. புதுச்சேரியில் கடந்த 26-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டமானது செப்-3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்திற்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.