சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி…!

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அவர்கள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அவர்கள் மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடியாக இருந்து வரும் நிலையில் சமூக பிரச்சினைகளுக்காக அவ்வப்போது உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபடுவது உண்டு.

இந்நிலையில் 84 வயதாகும் அன்னா ஹசாரேவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் புனேவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.