Shocking : தீவிர சுய இன்பத்தில் ஈடுபட்டதால் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்ட 20 வயது இளைஞன்..!

ஸ்விஸ் நாட்டில் தீவிர சுய இன்பத்தில் ஈடுபட்டதால், ஸ்பான்டேனியஸ் நிமோமெடியாஸ்டினம் என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞன். 

ஸ்விஸ் நாட்டில் வின்டர்தூரில் உள்ள கன்டோனல் மருத்துவமனையில், 20 வயது இளைஞன் மூச்சுத் திணறல் மற்றும் உடல் முழுவதும் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞனுக்கு ஸ்பான்டேனியஸ் நிமோமெடியாஸ்டினம் என்ற பிரச்னை இருப்பதை கண்டறிந்தனர்.

இது நுரையீரலில் இருந்து காற்று கசிந்து விலா எலும்பில் அடைக்கப்படும் போது ஏற்படக்கூடிய ஒரு அரிய தீங்கான நோயாகும். இதன் காரணமாக நுரையீரலில் காயமும் ஏற்படுகிறது. இந்த நோய் பொதுவாக இளைஞர்களை பாதிக்கிறது. தீவிர உடற்பயிற்சி அல்லது கட்டுப்படுத்த முடியாத இருமல் போன்ற பிரச்சனைகளால் இந்த நோய் ஏற்படுகிறது.

ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடவில்லை, புகைபிடிக்கவில்லை, போதைப்பொருள் பயன்படுத்தவில்லை, இருமல் பிரச்சனையால் பாதிக்கப்படவில்லை. ஆனால், அவர் மருத்துவரிடம் தான் தீவிர சுய இன்பத்தில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த ஆய்வின் முதன்மை ஆசிரியர்களான டாக்டர். நிகோலா ராஜிக் மற்றும் டாக்டர். கிறிஸ்டியன் ஷாண்டல் ஆகியோர் கூறுகையில், இந்த பிரச்னை தீவிர உடலுறவு காரணமாக ஏற்பட்டது. அந்த நபர் வீங்கிய முகத்துடன், கழுத்து, மார்பு மற்றும் முழங்கைகள் வரை கேட்கக்கூடிய ஒரு முணுமுணுப்பு சத்தத்துடன் மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் அந்த நபரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு, தொற்றுநோயைத் தடுக்க நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன. அடுத்த 24 மணி நேரத்தில் அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். பின் 3 நாட்களுக்கு பின் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.