மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர்கள்…!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

கும்பகோணத்தில், பொற்தாமரை குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த மேற்கு காவல்நிலைய முதல்நிலை காவலர் சுகுணா பார்த்துள்ளார்.

பின் அந்த பெண்ணுக்கு  சுகுனாவும், சக பெண் காவலர்களும் பிரசவம் பார்த்தனர். பின் தாயையும், சேயையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, இந்நிலைமைக்கு ஆளாக்கிய பாலக்கரையை சேர்ந்த ஜான் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.