உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது நேரடி வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணை..!

உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது நேரடி வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.  தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது நேரடி வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘”உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமையில் வாடாமல் இருப்பதற்கு, அக்குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்”. … Read more

#BREAKING : கேன் குடிநீர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு..! உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு..!

குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் குறைபாடுகள் பற்றி 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தரமற்ற குடிநீர் அருந்துவதால் காலரா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியின் போது தரத்தை ஆய்வு செய்த பின்புதான் கேன்களில் அடைத்து குடிநீரை … Read more

மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது!- அன்புமணி ராமதாஸ்

யூ-ட்யூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் வசிக்கும் லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு கோமதி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர் மனைவி கர்ப்பமான நிலையில், அவரது மனைவிக்கு கடந்த டிச.13 ஆம் தேதி குழந்தை பிறப்புக்கான டெலிவரி … Read more

இந்த மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு இயலாது..!

வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவல் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோன பரவுவதால், கண்டிப்பாக அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டீக்கடை, ஹோட்டல், வங்கிகள், … Read more

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம் – அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிசாலைகளாக மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 6,700 கி.மீ நீளமுள்ள சாலைகள் இரண்டு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு அகலப்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசல்  சாலைகள் தேர்வு செய்யப்பட்டு அகலப்படுத்தப்படும். நிலம் கையகப்படுத்துதல், மரம்வெட்டும் பணிகள் … Read more

தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாத ஆசிரியர்கள் வீட்டில் இருங்கள் – உயர்நீதிமன்றம்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாத ஆசிரியர்கள் பிறர் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் நல்லது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என பொதுநல வழக்கு ஒன்று  தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம். தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாத ஆசிரியர்கள் பிறர் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் நல்லது. 2 தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், பிற்காலத்தில் மாற்று … Read more

தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் – விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்

களிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், சாதனை படைத்த மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகளுக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் உறுதி. தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட அரசின் எந்த … Read more

மழை பாதிப்பு : மத்திய குழு இன்று வருகை…!

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு இன்று மதியம் சென்னை வருகின்றன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் மழையால் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆறுகள், குளங்கள், ஏரிகள் அணைகள் நிரம்பியதால் அதன்மூலம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த … Read more

2022 – 23 கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 10 அரசு மற்றும் கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி -அரசாணை வெளியீடு

2022 – 23 கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 10 அரசு மற்றும் கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2022 – 23 கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 10 அரசு மற்றும் கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சரி அவர்களால் 13.08.2021 அன்று 2021-22-ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை சட்டமன்றக் … Read more

#BREAKING : பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு – அரசாணை வெளியீடு

மக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கும்,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் பச்சரிசி, முந்திரி திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, இத்தொகுப்பில்,பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி வெல்லம், முந்திரி,திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, … Read more