மழை பாதிப்பு : மத்திய குழு இன்று வருகை…!

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு இன்று மதியம் சென்னை வருகின்றன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் மழையால் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆறுகள், குளங்கள், ஏரிகள் அணைகள் நிரம்பியதால் அதன்மூலம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மழையால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், பல வீடுகளும் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு உடனடி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.550 கோடியும், முழுமையான நிவாரணமாக ரூ.2,079 கோடியும் வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு இன்று மதியம் சென்னை வருகின்றன. சென்னை வரும் மத்திய குழுவினர் முதலில் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து, பின்பு சில குழுக்களாக பிரிந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பின் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.