கர்ப்பிணி பெண்களே…ரூ.5,000 உதவித் தொகை பெறுவது எப்படி.? இதோ முழு விவரம்…

Pradhan Mantri Matru Vandana Yojana

PMMVY: கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை பிறந்த பின், ஏற்படும் நிதி சுமையை குறைக்கும் நோக்கத்துடனும் தாய்-சேய் பராமரிப்பை ஊக்குவிப்பதற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முதன்முதலில் இந்திரா காந்தி மாத்ரு சஹாயோக் யோஜனா என 2010 இல் தொடங்கப்பட்டது. இந்த முயற்சியின் மூலம், தகுதியான நபர்கள் ரூ. 5,000 ஊக்கத்தொகையை மூன்று தவணை மூலம் பெற முடியும். இதனை பெறுவதன் மூலமாக … Read more

ஆம்புலன்சில் பிறந்த ஆண்குழந்தை – பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்..!

ஈரோடு  மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஆம்புலன்ஸிலேயே குழந்தை பெர்றேடுத்த பெண்.  ஈரோடு  மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பெண் ஒருவர் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் ஆம்புலன்ஸிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மருத்துவ உதவியாளர் அஜித்குமார் தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்துள்ளார்.  உதவியாளர் அஜித்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தாயும் சேயும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியின் மிக பெரிய மருத்துவமனைகளில் மாதந்தோறும் பிரசவத்திற்கு பின் 16 பெண்கள் இறப்பு..!

டெல்லியில் உள்ள நான்கு பெரிய அரசு மருத்துவமனைகளாகிய எய்ம்ஸ், ராம் மனோகர் லோகியா, சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் சுசேதா கிரிப்லானி ஆகிய  4 மருத்துவமனைகளிலும் ஒவ்வொரு மாதமும் பிரசவத்திற்கு பின் 16 பெண்கள் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 4 மருத்துவமனைகளிலும் ஜனவரி 2015 முதல் செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு  பிரசவத்திற்கு பின்பு 1281 பெண்கள் பிரசவத்திற்கு பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் பெண்களின் பிரசவத்திற்கு பின் ஏற்படும் உயிரிழப்புக்கு, அதிக ரத்தப்போக்கு, … Read more

யுடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது..!

யுடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த விவகாரத்தில், கோமதியின் கணவர் லோகநாதனை போலீசார் கைது  செய்துள்ளனர்.  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் வசிக்கும் லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு கோமதி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர் மனைவி கர்ப்பமான நிலையில், அவரது மனைவிக்கு கடந்த டிச.13 ஆம் தேதி குழந்தை பிறப்புக்கான டெலிவரி தேதி மருத்துவர் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும்,குறிப்பிட்ட தேதியில் அவர் … Read more

மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது!- அன்புமணி ராமதாஸ்

யூ-ட்யூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் வசிக்கும் லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு கோமதி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர் மனைவி கர்ப்பமான நிலையில், அவரது மனைவிக்கு கடந்த டிச.13 ஆம் தேதி குழந்தை பிறப்புக்கான டெலிவரி … Read more

யூடியூப் பார்த்து பிரசவம் – உயிரிழந்த குழந்தை!

ராணிப்பேட்டை:அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் லோகநாதன் என்பவர் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்து பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. யூடியூப் பார்த்து பிரசவம் பார்க்கும் பழக்கம் மக்கள் சிலரிடையே ஏற்பட்டு வரும் நிலையில்,அவ்வாறு பிரசவம் பார்க்கக் கூடாது என்றும்,இதனால் குழந்தை மற்றும் தாயின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என மருத்துவர்கள் தரப்பில் அவ்வப்போது அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில்,அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்து பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. … Read more

வீட்டில் வைத்து தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்..! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை..!

கோவையில் வீட்டில் வைத்து பெண் ஒருவர் தானாக பிரசவம் பார்த்ததால், குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு. இன்று தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள காலகட்டத்தில்,  சமையல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை இணையத்தில் பார்த்து பலரும் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் பிரசவம் என்பது அப்படி அல்ல, மருத்துவர்களால்  பார்க்கப் பட்டால் தான் அது பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். இல்லையென்றால், அது ஆபத்தில் தான் போய் முடியும். இந்நிலையில் கோவை செட்டி வீதியில் வசித்து வருபவர்கள் விஜயகுமார் -புண்ணியவதி தம்பதியினர். இவர்களுக்கு … Read more

பிரசவத்திற்கு பின்பும் வயிறு வீங்கிய பெண்!அறுவை சிகிச்சையில் வயிற்றின் உள்ளே இருந்த பொருள்!

பிரசவத்திற்கு பின் வயிறு வீங்கிய பெண்.பின்னர் உயிரிழந்த சம்பவம்.பரிசோதனையில் வயிற்றின் உள்ளே பஞ்சு மற்றும் துணி இருந்த அதிர்ச்சி சம்பவம். பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள். தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் ஆவார்.இவரது மனைவி பிரியா ஆவார்.இவர் பிரசவத்திற்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்கு பின்னர் தாயும் குழந்தையும் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்துவந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 31-ம் தேதி பிரியாவின் வயிறு திடீரென வீங்க தொடங்கியுள்ளது. மேலும் … Read more