ஐபிஎல் போட்டிகள் இனி இந்தியாவில் தான்- சவுரவ் கங்குலி

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இனி வழக்கம் போல இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது, இதனால் 2020 ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வைத்து நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 இடங்களில் நடைபெற்றது, 2021 ஆம் ஆண்டில் இரண்டு பகுதிகளாக இந்தியா … Read more

கங்குலி ராஜினாமா.?! இணையத்தை அதிர வைத்த செய்தி… உண்மை தகவல் இதோ…

உடல்நல குறைவு காரணமாக சவுரவ் கங்குலி தனது பிசிசிஐ தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்ததாக பொய்யான தகவல் வெளியானது.  கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐயின் தலைவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர், முன்னாள் கேப்டன் கங்குலி பதவி வகித்து வருகிறார். பிசிசிஐ-யின் செயலராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஓர் செய்தி இணையத்தில் தீயாய் பரவியது. அதாவது உடல் … Read more

‘சவுரவ் கங்குலி ராஜினாமா ? என்ன நடக்கிறது ‘- பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியானதையடுத்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம், கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவில்லை என்று கூறியுள்ளார். Sourav Ganguly has not resigned as the president of BCCI: Jay Shah, BCCI Secretary to ANI pic.twitter.com/C2O3r550aL — ANI (@ANI) June 1, 2022 முன்னதாக, கங்குலி … Read more

சூப்பர்…அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் – பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு முதல் முழு அளவிலான பெண்கள் ஐபிஎல்லை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் மகளிருக்கென இன்னும் தொடங்கப்படாத நிலையில்,மகளிர் டி20 போட்டியில் 3 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 சேலஞ்சை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில்,2023 ஆம் ஆண்டு முதல் முழு அளவிலான பெண்கள் ஐபிஎல்லை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தியாளர்களுக்கு … Read more

“டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று கோலியிடம் நாங்கள் கூறினோம்” – ODI கேப்டன் மாற்றம் குறித்து கங்குலி விளக்கம்!

ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து,ரோஹித் சர்மா தற்போது டி20 கேப்டனாக செயல்படுகிறார்.அதே நேரத்தில்,விராட் கோலி வழக்கமாக ஒருநாள் மற்றும் டெஸ்டில் தனது கேப்டன் ஷிப் செய்து வந்தார்.அதன்படி,நியூசிலாந்து தொடரை சிறப்பாக முடித்த இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியுடன் டிசம்பர் 26-ம் தேதி முதல் டெஸ்ட் மற்றும் … Read more

டிராவிட்டிற்கு பதிலாக முக்கிய பதவிக்கு பொறுப்பேற்கவுள்ள விவிஎஸ் லட்சுமண்!

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக விவிஎஸ் லட்சுமண் பொறுப்பேற்க உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்ததால், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வந்த முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப் பட்டார்.அதன்படி,வரும் 17 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து டிராவிட் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இதனால், … Read more