கங்குலி ராஜினாமா.?! இணையத்தை அதிர வைத்த செய்தி… உண்மை தகவல் இதோ…

உடல்நல குறைவு காரணமாக சவுரவ் கங்குலி தனது பிசிசிஐ தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்ததாக பொய்யான தகவல் வெளியானது. 

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐயின் தலைவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர், முன்னாள் கேப்டன் கங்குலி பதவி வகித்து வருகிறார்.

பிசிசிஐ-யின் செயலராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஓர் செய்தி இணையத்தில் தீயாய் பரவியது. அதாவது உடல் நலக்குறைவு காரணமாக கங்குலி தனது பதவியை ராஜினாமா செய்தார் எனவும்,

அதற்கு பதிலாக புதிய தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டார் எனவும் பொய்யான தகவல் வெளியானது. அதன் பின்னர் அது பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலோ ,  அறிவிப்போ வெளியாக வில்லை என்பதை தொடர்ந்து தான் இது வெறும் வதந்தி என தெரியவந்தது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment