எம்ஜிஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை..!

சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புடைசூழ மலர்தூவி மரியாதை எம்ஜிஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புடைசூழ மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் மாறியதை செலுத்தி, உறுதிமொழி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு!

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 35-வது நினைவு நாளை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.இதன்பின் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுள்ளனர். குடும்ப அரசியல் நடத்தி கொடி பிடிக்கும் தொண்டனை துச்சம் என நினைப்பது திமுகவின் வாடிக்கை. திமுகவை வீழ்த்துவதில் வெற்றி கண்ட எம்ஜிஆர் காட்டிய பாதையில் … Read more

அதிமுகவின் இந்த செயல் எம்.ஜி.ஆர் மனதில் வலி ஏற்படுத்தும் – ஓபிஎஸ்

சட்ட பேரவைக்கு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளோம் என ஓபிஎஸ் பேட்டி.  இன்று காலை 10 மணியளவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை தொடங்கியது. முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 61 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்தனர். ஓபிஎஸ் தரப்பில் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், சட்ட பேரவைக்கு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளோம். சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை … Read more

ஒரு தாயாக உங்களை கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து திருந்தப்பாருங்கள்- சசிகலா

சென்னை தேனாம்பேட்டையில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிசித்து சசிகலா அறிக்கை. அந்த அறிக்கையில், சென்னை தேனாம்பேட்டையில் நிறுவப்பட்டு இருந்த பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர்அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த இழிசெயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். பகைவருக்கு கூட பாசத்தை காட்டும் எங்கள் புரட்சித்தலைவரின் … Read more

பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்…!

எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து போற்றியமைக்கு பிரதமர் மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். அஇஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு புரட்சித்தலைவர் “பாரத ரத்னா”  எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து போற்றியமைக்கு பிரதமர் மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், ”ஒரு செயலை செய்து முடிக்க எண்ணுபவர், மிக உறுதியுடன் இருந்தால் அவர் நினைத்தபடியே அந்தச் செயலைச் செய்து முடிப்பார்’ … Read more

ஓபிஎஸ் மனைவியின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரன்…!

எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமியின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று காலை மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக … Read more

வாழ்க்கையிலும் கதநாயகன்..வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர் என்னும் சகாப்தம்… பிறந்த தினம் இன்று..!உடன்பிறப்புகள் கொண்டாட்டம்

திரையுலகில் மட்டும் நான் கதநாயகன் இல்லை அரசியலிலும் கதாநாயகன் என்று நிருபித்த மாபெரும் சகாப்தம் பிறந்த தினம் இன்று. சத்துணவு திட்டத்தை விரிவுப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர் இன்று எம்.ஜி.ஆர் என்று மூன்று எழுத்து சொந்தக்காரருக்கு 103 வது பிற்ந்த நாள்.ஒரு நடிகராக எம்ஜிஆர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் ஆச்சரியபட வேண்டிய விஷயம் காரணம் இதை  வடமாநில நடிகர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.ஒரு முறை வடமாநில திரையுல ஜாம்பவான்களான ராஜேஷ்கன்னாவும் திலீப்குமாரும் கூட எம்ஜிஆர் படங்களை இந்தியில் ரீமேக் … Read more