நைஜீரியாவில் குரங்கு அம்மை நோய்க்கு முதல் உயிரிழப்பு பதிவு..!

குரங்கு அம்மை நோய்க்கு நைஜீரியாவில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.  கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. … Read more

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு திடீர் பாதுகாப்பு.!?

பஞ்சாபின் பிரபல பாப் பாடகரான சித்து மூஸ்வாலா கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து இந்த கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னாய்க்கு தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து,  தற்போது பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான சல்மான்கானின்  வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாடகர்  சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக லாரன்ஸ் பிஷ்னாய் … Read more

என் குழந்தைக்கு ஜாதி கிடையாது.! கோவை தம்பதியின் அசத்தல் நகர்வு.!

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக். 33-வயதான இவர் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் மனைவி காயத்திரி தெற்கு ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு விமலா என்ற பெண்குழந்தை உள்ளது. இந்த குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்த தம்பதிகள் “வில்மா சாதி, மதம் சாராதவர்” என்ற சான்றிதழை வருவாய்த்துறையில் வாங்கியுள்ளனர். தனது மகளை பள்ளியில் சேர்க்க சென்றபோது சாதி சான்றிதழில் அவர்கள் எந்த … Read more

ரசிகர்கள் அழுதால் தான் இந்த படம் வெற்றி – ஹரி.!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “யானை”. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள். இந்த படம் வரும் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஹரி, அருண் விஜய், பிரியா பவானி … Read more

கத்தியால் குத்தி கொடூர கொலை செய்யும் விஜய் சேதுபதி.! வெட்டி தூக்கிய சென்சார்.!

அடுத்ததாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் “விக்ரம்”.  இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம்  கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்சார் போர்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  படத்தில் ஜிஎஸ்டி பற்றிய வசனம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அந்த வசனத்தை நீக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் , விஜய் சேதுபதி ஒருவர் … Read more

#Shoking:3 ஆண்டுகள் மட்டுமே ரஷ்ய அதிபர் புடின் உயிருடன் இருப்பார் -உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புற்றுநோய் காரணமாக 3 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்வார் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதை மேற்கோள் காட்டி தி இன்டிபென்டன்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.குறிப்பாக,69 வயதான புடின் பார்வையை இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக,ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் UK-வில் வசிக்கும் முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸ் கர்பிச்கோவ் என்பவருக்கு அனுப்பிய செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:”வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய் காரணமாக புடின் 3 ஆண்டுகள் வரை … Read more

அருவா வேணும்னா எடுத்துருவேன்.! பத்திரிகையாளர்களை பதற வைத்த ஹரி.!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வேல், ஆறு, சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து இருவரும் 6-வது முறையாக இணைவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பதாகவும், படத்திற்கு அருவா என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிறகு ஹரி … Read more

#Breaking:தமிழகத்தில் தொடங்கியது பருவமழை;இன்று 10 மாவட்டங்களில் கனமழை- வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழத்தின் உள்மாவட்டங்களின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது எனவும்,இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி,கோவை, திருப்பூர்,திண்டுக்கல்,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும்,நாளை முதல் நான்கு நாட்கள் தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் … Read more

குஷியோ குஷி…விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் – ரூ.21 ஆயிரம் கோடியை வெளியிட்ட பிரதமர் மோடி!

மத்திய பாஜக அரசின் எட்டாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து,இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லாவில் இருந்து மத்திய திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்றி வருகிறார்.இந்நிலையில்,விவசாயிகளின் உதவித் தொகை அடுத்த தவணையாக ரூ.21 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு … Read more

#Breaking:இந்த பல்.கழகத்தின் பட்டப் படிப்புகள் செல்லாது – யுஜிசி திடீர் அறிவிப்பு!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிப்பு விடுத்துள்ளது. மேலும்,பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம்,முன் அனுமதி பெறாமல் தொலைதூரக் கல்வி,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பெரியார் பல்கலைக்கழகத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு யுஜிசி பரிந்துரைத்துள்ளது.