தன்னை போலவே இருக்கும் AI மாடல்.! அதிர்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின்.!

Vladimir Putin

AI தொழில்நுட்பம் பல துறைகளில் சாதனைகளைப் படைத்திருந்தாலும், சில இடங்களில் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அதிலும் டீப்ஃபேக் (Deep fake) என்ற AI தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த ஏஐ, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெரிகிற ஒருவரின் முக ஜாடையை அப்படியே மற்றொருவரை போல மாற்றிவிடும் திறனை கொண்டுள்ளது. டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல பிரபலங்களின் டீப்ஃபேக் விடீயோக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பொதுமக்களுடனான செய்தியாளர் … Read more

ரஷ்யாவில் ஆட்சி கவிழ்ப்பு..விளாடிமிர் புதின் இறந்துவிட்டாரா.? கிரெம்ளின் மாளிகை விளக்கம்.!

vladimir putin

கடந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக ஜெனரல் எஸ்.வி.ஆர் என்ற டெலிகிராம் சேனல் தகவல் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று விளாடிமிர் புதின் மாஸ்கோவிற்கு வடக்கே வால்டாயில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 8:42 மணியளவில் உயிரிழந்தார் என்று செய்தியை வெளியிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. புதின் இறந்துவிட்டதாக செய்தியை பரப்பிய டெலிகிராம் சேனல் ரஷ்யாவில் ஆட்சி கவிழ்க்க சதி நடந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த  சேனலில் வெளியான … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.! ரஷ்யாவின் தீர்மானத்தை நிராகரித்தது ஐ.நா.!

Russia President Putin

இஸ்ரேல் மீது பாலத்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தற்போது வரை தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை சுமார் 3000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  இந்த போர் காரணமாக காசா பகுதியில் வாழும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு … Read more

#BREAKING: உக்ரைனின் 4 பிராந்தியங்களை இணைத்தது ரஷ்யா! – அதிபர் அறிவிப்பு

உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்து அதிபர் விளாடிமிர் புதின் அறிவிப்பு. உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்து அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். அதன்படி, உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை சேர்ந்த மக்களின் விருப்பத்தை தெரிந்துகொள்ள ரஷ்யா பொது வாக்கெடுப்பை நடத்தியது. இதற்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார். கடந்த 23-ம் … Read more

#BREAKING: படையை திரட்ட ரஷ்ய அதிபர் புதின் அதிரடி உத்தரவு!

ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி அழித்திட மேற்கு நாடுகள் சதி செய்வதாகவும் அதிபர் புதின் புகார். உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவில் படைகளை திரட்டுமாறு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ராணுவ பயிற்சி பெற்று வேறு வேளைகளில் ஈடுபட்டுள்ள போரிடும் உடல் தகுதியுள்ளவர்களை திரட்ட அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்று ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றி, படையில் இருந்து விலகி வேறு வேறு பணிகளில் உள்ளவர்களையும் திரட்ட அதிரடியாக ஆணையிட்டுள்ளார். ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி, இறுதியில் … Read more

#Shoking:3 ஆண்டுகள் மட்டுமே ரஷ்ய அதிபர் புடின் உயிருடன் இருப்பார் -உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புற்றுநோய் காரணமாக 3 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்வார் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதை மேற்கோள் காட்டி தி இன்டிபென்டன்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.குறிப்பாக,69 வயதான புடின் பார்வையை இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக,ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் UK-வில் வசிக்கும் முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸ் கர்பிச்கோவ் என்பவருக்கு அனுப்பிய செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:”வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய் காரணமாக புடின் 3 ஆண்டுகள் வரை … Read more

ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை? வெளியான தகவல்!

ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்று நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில், தனது பொறுப்பை அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவரின் சமூகவலைத்தள தகவலை சுட்டிக்காட்டி அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் இதழ், இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ரஷ்ய அதிபர் புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் … Read more

#BREAKING: மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா! – அதிபர் புடின் அறிவிப்பு

ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என அதிபர் புடின் பெருமிதம். உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. ரஷ்ய படைகளுக்கு பாராட்டுக்கள் எனவும் தெரிவித்துள்ளார். … Read more

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 300 டாலரை எட்டும் – ரஷ்யா எச்சரிக்கை!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி முதல் ராணுவ தாக்குதலில் கடுமையாக ஈடுபட்டு, முக்கிய நகரங்களை கைப்பற்றி வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. போர் நாடாகும் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க, மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்ததாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதன்படி, உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக … Read more

#BREAKING: ஒரே அடியாக 17 நாடுகளை தூக்கியது ரஷ்யா!

உக்ரைன் மீது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா நேற்று அறிவித்திருந்தது. போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய … Read more