15 கோடி மோசடி… 2 பேர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்த எம்எஸ் தோனி!

ms dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து, 2 பேர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளார். 2017ம் ஆண்டு கிரிக்கெட் அகாடமி அமைப்பது குறித்து தோனியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதற்காக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் லிமிட்டெடை சேர்ந்த திவாஹர் மற்றும் விஷ்வாஷ் இருவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட்டை சேர்ந்த மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஷ்வாஷ் என்ற அதிகாரிகள் … Read more

இது தான் தோனிக்கு கடைசி ஐபிஎல்லா? காசி விஸ்வநாதன் பதில்!

CSK DHONI

அடுத்த ஆண்டு (2024) ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் (டிசம்பர் 19 ) ஆம் தேதி மினி ஏலம் துபாயில் நடந்தது. அதில் ஐபிஎல்லில் விளையாடும் அணிகள்  தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் வாங்கினர். அதனை தொடர்ந்து தற்போது வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில்  விளையாட தயாராகி வருகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரையில் வழக்கம்போல, அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டனாக செயல்படுவார். இந்த தகவல் … Read more

ஆர்சிபிக்கு கப் அடிச்சு கொடுங்க! ரசிகர் கேள்விக்கு பதில் அளித்த தோனி!

MS DHONI about RCB

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதய சென்னை அணியின் கேப்டனுமான தோனி படைத்த சாதனைகளை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்று இருந்தாலும் இன்னும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி கொண்டு வருகிறார். சென்னை அணிக்காக விளையாடிய அவர் 5 முறை கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறார். இப்படி சிறந்த கேப்டனாக தோனி இருப்பதன் காரணமாகவே மற்ற அணிகளின் ரசிகர்கள் தோனி நம்மளுடைய அணிக்கு … Read more

இது நல்ல முடிவு… தோனியின் 7ம் நம்பருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து ராஜீவ் சுக்லா கருத்து!

Rajeev Shukla

இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்துள்ள மிகப்பெரிய பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு ஓய்வு அளித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்திருந்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் 2004ல் தோனி அறிமுகமானதில் இருந்து விளையாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரது ஜெர்சி நம்பர் 7க்கும் ஓய்வு அளிக்கவேண்டும் என்றும் அதுதான் … Read more

M.S.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு.! ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.!

Madras high court - MS Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, 2013 ஐபிஎல் சூதாட்டட் விவகாரத்தில் தொடர்புடையதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அப்போது சூதாட்ட வழக்கை விசாரிக்கும் குழுவில் சம்பத் குமார் பொறுப்பில் இருந்தார். ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கிரிக்கெட் வீரர் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கிறது என கூறியிருந்தார். அதன் பிறகு தன் மீதான சூதாட்ட புகாருக்கு எதிராக … Read more

நம்பர் 7க்கு ஓய்வு… எம்.எஸ் தோனியை கெளரவித்த பிசிசிஐ!

Jersey No 7

இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்துள்ள பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 1998ம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். முதல் முதலில் பீகார் அணிக்காகக் களமிறங்கிய அவர், அடுத்து இந்திய அணியில் இடம் பிடித்து பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதில் குறிப்பாக, ஐசிசி கோப்பைகள் அனைத்தையும் வென்ற கேப்டன் … Read more

இதை செய்தால் தோனி சுலமபாக கடுப்பாகி விடுவார்… முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்யூ ஹைடன் சொன்ன பதில்!

matthew hayden

முன்னாள் இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், விராட் கோலி போன்றோருடன், இந்தியா இதுவரை உருவாக்கிய மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் எம்.எஸ். தோனியும் ஒருவர். எம்.எஸ். தோனி தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஐசிசி பட்டங்களை வென்று சிறந்த கேப்டனாக திகழ்கிறார். அதுமட்டுமில்லாமல், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) 5 பட்டங்களை வென்று, மும்பை இந்தியன்ஸ் … Read more

தோனிக்கு பிறகு சென்னைக்கு ருதுராஜ் தான் கேப்டன்…இளம் கிரிக்கெட் வீரர் புகழாரம்.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது நடந்து வரும், விஜய் ஹசாரே 2022 கோப்பையின் போட்டியில் மஹாராஷ்டிரா அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற  உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் கூட  ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஒவரில் 7 சிக்ஸர் உட்பட 43 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். … Read more

இந்தியா சிமெண்ட்ஸ் 75வது ஆண்டுவிழா.! அமித்ஷா, தோனி, ஓபிஎஸ், பங்கேற்பு.!

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் அமைச்சர் அமித்ஷா, தோனி, ஆளுநர் ரவி, ஓபிஎஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.  இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது பவளவிழா ஆண்டை முன்னிட்டு இன்று சென்னையில் கலைவாணர் அரங்கில் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விழாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், தமிழக ஆளுநர் ரவி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, ஓ.பன்னீர்செல்வம் … Read more

#MSDhoni சற்று நேரத்தில் நேரலையில் எம்.எஸ்.தோனி முக்கிய அறிவிப்பு வெளியாகிறது

இன்று ஒரு உற்சாகமான செய்தியை அறிவிக்கப்போவதாக எம்.எஸ்.தோனி தனது முகநூல் பக்கத்தில் சஸ்பென்ஸ் பதிவை நேற்று தெரிவித்திருந்தார். தோனி, கடந்த 2020இல் இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் இல் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக தோனி அறிவித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்னும் சில  நிமிடங்களில் அவர் நேரலையில் வர உள்ளார்.