தோனிக்கு பிறகு சென்னைக்கு ருதுராஜ் தான் கேப்டன்…இளம் கிரிக்கெட் வீரர் புகழாரம்.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது நடந்து வரும், விஜய் ஹசாரே 2022 கோப்பையின் போட்டியில் மஹாராஷ்டிரா அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற  உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் கூட  ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஒவரில் 7 சிக்ஸர் உட்பட 43 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார்.

இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், மகாராஷ்டிர கிரிக்கெட் வீரர் அஜீம்,  தனது கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய கிரிக்கெட் வீரர்  அஜீம் “விரைவில் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆகலாம், மேலும் அவர் தோனிக்கு அடுத்த படியாக வரலாம்.  கடந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக  தேந்தெடுக்க அணியின் முயற்சி தோல்வியடைந்தது.

இதனால் , எதிர்காலத்தில் சென்னை அணியை வழிநடத்த தோனிக்கு பிறகு சிறந்த வீரராக ருதுராஜ் கெய்க்வாட்  வரலாம். புதிய விஷயங்கள் பலவற்றை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டு வருகிறோம். அணியில் ஒரு வீரர் மேம்படுத்த அவரது ஆலோசனைகள் உதவியாக இருக்கிறது .” என புகழ்ந்து பேசியுள்ளார் அஜீம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment