கொளுத்தி போட்ட கோடநாடு விவகாரம்..!!ஆளுநரை சந்தித்த ஆளும்கட்சி ஆதரவாளர்கள்..!!

தமிழக முதல்வர் மீது நேரடியாகவே குற்றாச்சாட்டுகளை குண்டுகள் போல் பொழிந்த நிலையில் இந்த குற்றசாட்டனாது குற்றம்சாட்டியவர்களே கூறியது தான் பெரும் அதிர்வலைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக மக்களின் கேள்வியாக மாறியுள்ள கோடநாடு கொள்ளை-கொலை இப்பொழுது சந்தேகமாக மாறியுள்ளது.இந்நிலையில் இந்த விவகாரம் முழுக்க காரணம் முதல்வர் தான் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில் குற்றம்சாட்டியவர்களை கைது செய்ய செல்லி விரைந்த தனிப்படை கைது செய்து அதிகாலை சென்னை கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். தமிழக போலீசாரின் எத்தனை வேகம் ஏன் … Read more

பழனி முருகன் கோயிலில் கேரள ஆளுநர் சதாசிவம் சாமி தரிசனம்…!!

பழனி முருகன் கோயிலில் கேரள ஆளுநர் சதாசிவம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த கேரள ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சதாசிவம் தனது குடும்பத்தினருடன் ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றார். அங்கு முருகனை தரிசனம் செய்த அவர்கள், உச்சிக்கால பூஜையில் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் முருகப்பெருமானின் உருவப்படம் பரிசாக வழங்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க வருமாறு காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு…

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க வருமாறு காங்கிரசுக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேல் அழைப்பு விடுத்துள்ளார். 230 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 109 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதியில் வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. இந்நிலையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு … Read more

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம்..!!!

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை அமைந்திருக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை பல்கலக்கழக வேந்தரும், தமிழக ஆளுனருமான பன்வாரிலால் ரோகித் உத்தரவை பிறப்பித்துள்ளார். துணைவேந்தராக நியமிக்கப்பட்ட குமார் என்பவர் தோட்டக்கலை கல்லூரியின் முதல்வராக  பணியாற்றி வந்துள்ளர். மேலும் 22 ஆண்டுகாலம் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். நியமிக்கப்பட்ட இவர் 3 ஆண்டு காலம் துணை வேந்தராக பதவி இதில் … Read more

"4 முறை ஆளுநரை சந்தித்தாரா நிர்மலா தேவி" ஆளுநர் மாளிகை விளக்கம்..!!

நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததும் இல்லை, அவரை ஆளுநர் சந்தித்ததும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததும் இல்லை, அவரை ஆளுநர் சந்தித்ததும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 2 நாட்களுக்கு முன்னதாக ஆளுநர் குறித்து அவதூறு பரப்பியதாக, ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நக்கீரன் வார இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் உட்பட 35 பேர் மீது இந்திய தண்டனை … Read more

மன்னார்குடியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம்….!!

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார்.இந்நிலையில் கோவிலுக்கு வருகைதந்த ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவில் யானை செங்கமாவுக்கு பழங்கள் வழங்கி ஆசி பெற்ற ஆளுநர், சன்னதி சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்த தீட்சிதர்கள் அவருக்கு கோவில் வரலாறு குறித்து விளக்கினர்.இதில் தமிழக அமைச்சர் காமராஜ் மற்றும் … Read more

7 பேர் விடுதலையில் சிக்கல்..? ஆளுநர் மாளிகை கருத்து..!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பரிந்துரை செய்தது. தமிழக அரசின் பரிந்துரை குறித்து உள்துறையின் கருத்தினை ஆளுநர் மாளிகை கேட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ளது ஆளுநர் மாளிகை. 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான … Read more

மீண்டும் சர்ச்சையை கிளப்பும் ஜெயலலிதா மரணம்..!! இறந்தது இரவு 11.30 முதல்வராக அன்று மாலையே வா…?

ஜெயலலிதா மறைந்த தினத்தின் மாலையிலேயே முதலமைச்சர் பதவி ஆளுநரின் தனிச் செயலாளர் வாக்குமூலத்தால் மீண்டும் சர்ச்சை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த தினத்தின் அன்று மாலையிலேயே அடுத்த முதலமைச்சர் பதவி ஏற்புக்கான ஏற்பாடு நடைபெற்றதாக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் தனிச் செயலாளர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா … Read more

ஜம்மு காஷ்மீர் அளுநராக பதவியேற்றார்..!சத்யபால் மாலிக்..!!

ஜம்மு காஷ்மீர் மாநில அளுநராக சத்யபால் மாலிக் தலைநகர் ஸ்ரீநகரில் பதவியேற்றார்.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வந்த என்.என். வோராவுக்குப் பதிலாக புதிய ஆளுநராக சத்யபால் மாலிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுநாள் வரை சத்யபால் மாலிக் பிஹார் மாநில ஆளுநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

ஆளுநர் தன் அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் : ப.சிதம்பரம் டிவிட்

தமிழ்நாட்டில், மாவட்டவாரியாக பல இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  சென்று ஆய்வு செய்து வருகிறார். இதற்கு ஆளுங்கட்சியை தவிர்த்து,மற்ற அனைத்து கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் சட்டப்படியே ஆய்வு நடக்கிறது என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவருகிறது. இது பற்றி மேலும் தெரிவிக்கையில், கவர்னரின் வேலைகளை மரியாதை குறைவாக பேசுவது சட்டப்படி குற்றமாகும் எனவும் ஆளுநர் மாளிகையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குறித்து, முன்னாள் மத்திய மந்திரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் அவர்கள் வெளியிட்டுள்ள டிவிட்டரில், தமிழக … Read more