என்னை யாரும் தடுக்க முடியாது.. இதற்காக நான் பெருமை கொள்கிறேன் – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முகமது ஷமி!

Mohammed Shami

நான் ஒரு இஸ்லாமியனாகவும்  பெருமை கொள்கிறேன், ஒரு இந்தியாகவும் பெருமை கொள்கிறேன் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி சாதனை படைத்தார். அப்போது, இதனை கொண்டாட விதமாக முகமது ஷமி தரையில் அமர்ந்து தனது கைகளை நீட்டி பிராத்தனை (Sajdah) செய்ய சென்றதாகவும், பின் சுதாரித்துக்கொண்டு பின்வாங்கியதாகவும், சிலர் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான … Read more

சிதம்பரம் கோயில் சர்ச்சை:நாளை மாலை 3 மணிக்குள் – இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறைத் குழுவால் ஆய்வு நடத்தப்பட இருந்த நிலையில்,தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.அதன்பின்னர்,சட்டப்படி உறுதியாக ஆய்வு … Read more

ராமநாதபுரத்திலும் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை!

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை. ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏற்கனவே நேற்று மதுரை மருத்துவ கல்லூரியில் மட்டும் சரத் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்படவில்லை, ராமநாதபுரத்திலும் மார்ச் 11-ஆம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக வீடியோ பரவியது. அங்கு இப்போகிரேடிக், சரக் சபத், உடற்கூறுவியல் என 3 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டோம் என கல்லூரி டீன் … Read more

லட்சத்தீவு நடிகை ஆயிஷா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு..!

லட்சத்தீவு பிரச்சனை குறித்து உயிரியல் ஆயுதம் என்ற கருத்து தெரிவித்த நடிகை ஆயிஷா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்சத்தீவை சேர்ந்தவர் ஆயிஷா சுல்தானா. இவர் பல மலையாள படங்களின் இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். திரைப்பட இயக்குநர், மாடல் மற்றும் நடிகையாக விளங்கும் ஆயிஷா சுல்தானா மலையாள தொலைக்காட்சி விவாதத்தில், லட்ச தீவில் கொரோனாவை உயிரியல் ஆயுதமாக அரசு பயன்படுத்துகிறது என்ற கருத்தை தெரிவித்தார். இவர் கூறியிருப்பது அரசுக்கு எதிரான செயல் என்று அங்குள்ள பாஜகவினர் … Read more

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை ‘அடித்து உதைக்க’ வேண்டும்.! திமுக தலைவர் கடும் விமர்சனம்.!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசி அவர், தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடித்து உதைக்க வேண்டும் என்றும், தற்போதைய ஆட்சி கமிஷன் ஆட்சியாக இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது திமுக தலைவர் … Read more

தமிழக வளத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி.! மதிமுக பொதுச்செயலாளா்ஆவேசம்.!

சேலத்தில் மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ இன்று கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழக வளத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக செயலாளா் வ.கோபால்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மொழிப்போா் தியாகிகள் நினைவாக சேலம் மாநகரில் சனிக்கிழமை (இன்று) நடைபெறும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்துக்கு தமிழக மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வருகை தர இருக்கிறாா். சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வரும் … Read more

“திமுக ஒரு திருட்டு கட்சி, மக்களை ஏமாற்றும் கட்சி”.! அதிமுக அமைச்சர் கடும் விமர்சனம்.!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா தலைமையில் நடைபெற்றது. தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு அதில் சிறப்புரையாற்றிய அவர் திமுகவை பொருத்தமட்டில் அது ஒரு திருட்டு கட்சி, மக்களை ஏமாற்றும் கட்சி என்று விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா … Read more

சேவாக் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது.! நக்கலா பதிலடி கொடுத்த பாகிஸ்தான் வீரர்.!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அக்தர், யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் கிரிக்கெட் தொடர்பாகவும், வீரர்கள் தொடர்பாகவும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு சேவாக் அவரது சேனல் குறித்து கருது தெரிவித்தார், அதற்கு தற்போது சேவாக் உங்களுடைய தலையில் இருக்கும் முடியை விட என்னிடம் அதிகமான பணம் இருக்கிறது என்று, கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். அதிலும் அதிவேகத்தில் அக்தர் பந்து வீச, அதை … Read more

தமிழகம் தான் ரஜினிக்கு நன்றி சொல்லவேண்டும்.! துக்ளக் பத்திரிகையின் எடிட்டர் பதிவு.!

துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் நடத்திய பேரணி குறித்தும், செருப்பு வீச்சு குறித்தும், கற்பனையாக நான் எதையும் கூறவில்லை. அதனால் நான் மன்னிப்புக் கேட்க முடியாது என்று தெரிவித்தார். துக்ளக் பத்திரிகையின் எடிட்டர் குருமூர்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு தான் இது என்று கூறி, தமிழகம் தான் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும், என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த 50-வது ஆண்டு துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, அவ்விழாவில் … Read more

ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் வீட்டை முற்றுகையிடுவோம்.! தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை.!

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது என அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் அவரது வீடு முற்றுகையிடபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் … Read more