#BREAKING: ராணுவ வாகன விபத்தில் 16 வீரர்கள் வீரமரணம்!

வடக்கு சிக்கிம் பகுதியில் உள்ள ஜெமாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.  வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனம் பள்ளத்தில் விழுந்து நொறுக்கிய விபத்தில் 16 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய மேலும் 4 வீரர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் … Read more

ஜம்மு-காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்..! ராணுவ வீரரின் உடல் இன்று மதுரை வருகை..!

ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல், இன்று மதுரை வருகிறது ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான  இவர்  மதுரை மாவட்டம் … Read more

டெல்லி – ராஜஸ்தான் : 50 மணி நேரத்தில் 350 கி.மீ ஒடிய இராணுவ ஆர்வலர்..!

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள ராணுவ ஆட்சேர்ப்பு இயக்கங்களை மீண்டும் தொடங்குமாறு கோரிக்கை வைத்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள சுகர் பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் ஓடிச்சென்றே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். மார்ச் 29ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய இவர் 50 மணி நேரம் ஓடி உள்ளார். கிட்டத்தட்ட 350 கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்றுள்ள சுரேஷ் பிக்சர் எனும் … Read more

விபத்துக்கு இதுதான் காரணம்? ஆய்வறிக்கை தயார்! – வெளியான அதிர்ச்சி தகவல்!

குன்னுரில் அருகே ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்து மோசமான வானிலையே காரணம் என தகவல். கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி குன்னுர் அருகே Mi-17V5 என்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உலகின் மிக அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர் … Read more

முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவ இட ஒதுக்கீடு – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு. புதுச்சேரியில் முன்னாள் ராணுவ அதிகாரிகளின் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் மருத்துவ கல்வியில் 3% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாகலாந்து துப்பாக்கி சூடு : ராணுவத்தினர் மன்னிப்பு – உள்துறை அமைச்சர் அமித்ஷா!

நாகலாந்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ராணுவத்தினர் மன்னிப்பு கோரியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். நாகலாந்து மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை இராணுவத்தினர் தீவிரவாதிகள் என நினைத்து பொது மக்கள் மீது நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் மற்றும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாகலாந்து துப்பாக்கிச்சூடு … Read more

வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர்…!

வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த 3 இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு முதல்வர் 20 லட்சம் காசோலை வழங்கியுள்ளார். ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த மூன்று படைவீரர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் வைத்து கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி உள்ளார். இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் சேர்ந்த படைவீரருக்கு ஏகாம்பரம் அவருடைய மனைவி குமாரி அவர்களுக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி … Read more

மத்திய பிரதேசம் : 30 இராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தடுப்பூசி எடுத்துக்கொண்ட 30 இராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், தொடர்ந்து ஆங்காங்கே பரவிக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் முன்கள பணியாளராக பணியாற்ற கூடிய மருத்துவர்கள், காவலர்கள், ராணுவ வீரர்கள் பலருக்கும் கொரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள 30 ராணுவ வீரர்களுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி … Read more

ஜனநாயக அரசை சேர்ந்த முன்னாள் எம்.பிக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்த மியான்மர் ராணுவம்!

மியான்மரில் ஜனநாயக ஆட்சி நடைபெற்ற பொழுது எம்.பிக்களாக இருந்த அனைவரையும் மியான்மரில் உள்ள ராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் நள்ளிரவிலேயே கைது செய்யப்பட்டு மியான்மரில் … Read more

“ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்”- டெல்லி அரசு வலியுறுத்தல்!

நாட்டில் உள்ள அனைத்து ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஓப்படைக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் டெல்லியில் நாள் ஒன்றுக்கு 25,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளதாகவும், ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் … Read more