ஜம்மு-காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்..! ராணுவ வீரரின் உடல் இன்று மதுரை வருகை..!

ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல், இன்று மதுரை வருகிறது

ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான  இவர்  மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை சேர்ந்தவர். இவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல், இன்று மதுரை வருகிறது. மதுரை விமான நிலையத்தில் ஆட்சியர், அமைச்சர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment