அவசர சிகிச்சையில் அலட்சியம் கூடாது.! சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்.! – புதுசேரி முதல்வர்.!

காலதாமதமாக சிகிச்சை அளித்ததன் காரணமாக தான் 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுளளனர். எப்போதும் அவசர சிகிச்சையில் அலட்சியம் இருக்கவே கூடாது. – இவ்வாறு புதுசேரி முதல்வர் ரங்கசாமி ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் காரைக்காலில் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் உயிரிழந்த சம்பவம் தற்போது வரையில் பேசுபொருளாக உள்ளது. தன் மகளை விட அதிக மார்க் எடுத்துவிட கூடாது என பால மணிகண்டனின் சக மாணவியின் தயார் சகாயராணி விஷம் கொடுத்துள்ளார். அதன் … Read more

முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவ இட ஒதுக்கீடு – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு. புதுச்சேரியில் முன்னாள் ராணுவ அதிகாரிகளின் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் மருத்துவ கல்வியில் 3% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குக – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதுடன் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல். ஆந்திர மாநிலம் திருப்பதியில் மத்திய உள்துறையை அமைச்சர் அமித்ஷா தலைமையில், தென்னிந்திய மாநில முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநில முதல்வர்கள், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள், லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பங்கேற்கின்றனர். முன்னதாக நேற்று இரவு அமித்ஷாவை முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசினார். அப்போது … Read more

#Breaking: வருகின்ற 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – புதுச்சேரி முதல்வர்..!

நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக,ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எனினும், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில்,கொரோனா தொற்று குறைந்து வருவதன் காரணமாக புதுச்சேரியில் வருகின்ற 16 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள்  திறக்கப்பட்டு முதற்கட்டமாக 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி … Read more