தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் முடிவு…!மே 16 – தேர்வு முடிவுகள் …!

இன்றுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்  முடிவடைகின்றன. கடந்த மாதம் 1-ஆம் தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்.

கடைசி நாளான இன்று கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாச்சாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி – வேதியியல், சிறப்புத் தமிழ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே அறிவித்தபடி தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment