உ.பி.யில் பயங்கர தீ விபத்து.. 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!

உ.பி.யில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் பலி மற்றும் 64 பேர் காயம். உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 64 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் அடங்குவர் எனபதோஹி டிஎம் கவுரங் ரதி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் … Read more

62 ஸ்டீல் ஸ்பூன்களை விழுங்கிய இளைஞர்.. 2 மணிநேரம் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

உ.பி.யில் 32 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து 62 ஸ்டீல் ஸ்பூன்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு 32 வயது நபரின் வயிற்றில் இருந்து 62 ஸ்டீல் ஸ்பூன்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து நோயாளியிடம் மருத்துவர் டாக்டர் ராகேஷ், நீங்கள் ஸ்பூன் சாப்பிட்டீர்களா என்று கேட்டபோது, ​​அந்த நபர் ஒரு வருடமாக சாப்பிட்டு வருகிறேன் என்று நோயாளி கூறியதாக, மருத்துவர் தெரிவித்தார். … Read more

தலித் மாணவர் மரணம்.. வன்முறை போராட்டத்தில் அவுரியா மக்கள்.. ஆசிரியர் தலைமறைவு!

தலித் மாணவர் மரணம் தொடர்பாக உ.பி.யின் அவுரியாவில் வன்முறைப் போராட்டம். ஆசிரியர் தப்பி ஓடியதாக குற்றம் சாட்டு. உத்தரபிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தலித் மாணவர்(15) தேர்வின் போது ஒரு வார்த்தையை தவறாக உச்சரித்ததால், ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து வன்முறை போராட்டங்கள் நடந்தன. வன்முறை போராட்டத்தின் போது தீ வைப்பு மற்றும் கல் வீச்சு சம்பவங்கள் பதிவாகி, இரண்டு போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் … Read more

உ.பி.யில் பலத்த மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள்பலி!

கன மழைக்கு மத்தியில் உ.பி.யின் எட்டாவாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் பலி, 2 பேர் காயம். உத்தரபிரதேசத்தின் எட்டாவாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார், என முதல்வர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. மேலும் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் உடன்பிறந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உ.பி-யில் 14 வயது தலித் மாணவரை கட்டையால் தாக்கிய ஆசிரியர்

உத்திர பிரதேசத்தில் கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டதற்காக 14 வயது மாணவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டதற்காக 14 வயது தலித் மாணவரை ஆசிரியர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ஆசிரியர் முதலில் அனுமதி மறுத்துள்ளார், இரண்டாவது முறையாக கேட்டபோது, ​​மாணவனை கட்டையால் அடித்தாகவும், அதில் சிறுவன் மயங்கி விழுந்ததாகவும் கூறினர். மேலும் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு SC/ST சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு … Read more

144 தடை.! ஞானவாபி மசூதி சுவரில் இந்து கடவுள் படங்கள்… முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு.!

உத்திரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி குறிப்பிட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதனை ஒட்டி, இன்று வாரணாசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.  உத்திரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதன் கோவில் பகுதில் ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த சுவரில் இந்து கடவுள்களின் அடையாளங்கள் (படங்கள் ) இருப்பதாக கூறி 5 பெண்கள் மாவட்ட நீதிமன்றத்தை நாடினர். அதாவது, மசூதி சுவரில் உள்ள இந்து கடவுள்களின் படங்களை தரிசிக்க அனுமதி வேண்டும் என … Read more

தனது நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்திய 38 வயது நபர்!!

உத்தர பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கடடாமில் உள்ள ஷீத்லா தாம் கோயிலில் இன்று ஒருவர் தனது நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌசாம்பி பகுதியைச் சேர்ந்த சம்பத் (38) என்ற பக்தர், அவரது மனைவி பன்னோ தேவி ஆகியோர் கங்கை நதியில் நீராடிவிட்டு கோயிலுக்கு வந்தனர். கோவிலின் பரிகாரத்தை சுற்றி முடித்த பிறகு, அவர் தனது நாக்கை பிளேடால் அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினார். அவர் தற்போது சிகிச்சைக்காக … Read more

ரயில் தண்டவாளத்தில் விழுந்த நபர், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கும் காட்சி-வைரலாகும் வீடியோ

ரயில் தண்டவாளத்தில் விழுந்த நபர், ரயில் அவரைக் கடந்து சென்ற பிறகும் அதிசயமாக உயிர் பிழைக்கும் காட்சி. ரயில்வே பிளாட்பாரம் ஒன்றில் ஒரு நபர் மீது ரயில் கடந்து செல்லும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் எட்டாவாவில் உள்ள பர்தானா ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. அந்த வீடியோவில் பிளாட்பாரத்தின் அருகே பலர் கூடியிருப்பதையம், ரயில் கடந்து சென்ற பிறகு ஒரு நபர் அதிசயமாக தனது உடலில் ஒரு கீறல் … Read more

கழிவறையை சுத்தம் செய்யும் பள்ளி மாணவர்கள் வைரலாகும் வீடியோ!!

உத்திரப்பிரதேச பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ய பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தும் தலைமை ஆசிரியர்!! வைரலாகும் வீடியோ.. உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் சோஹவ்ன் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில், பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யும் படியும், இல்லையெனில் கதவை பூட்டிவிடுவேன் என்று கூறும் காட்சிகள் பதிவாகியுள்ளது. Primary School … Read more

விநாயகர் சிலை கரைக்கும் பொது நீரில் மூழ்கி 7 குழந்தைகள் பலி!!

உத்தரபிரதேசத்தில் கங்கை நதியில் விநாயகர் சிலை கரைக்கும் போது 3 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் உள்ள கங்கை நதியில் விநாயகர் சிலைகளை கரைக்கச் சென்ற மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை(செப் 9) இச்சம்பவம் நடந்துள்ளது. மேலும் இதே போல் சந்த் கபீர் நகரில் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது … Read more