உ.பி-யில் 14 வயது தலித் மாணவரை கட்டையால் தாக்கிய ஆசிரியர்

உத்திர பிரதேசத்தில் கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டதற்காக 14 வயது மாணவரை ஆசிரியர் தாக்கியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டதற்காக 14 வயது தலித் மாணவரை ஆசிரியர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ஆசிரியர் முதலில் அனுமதி மறுத்துள்ளார், இரண்டாவது முறையாக கேட்டபோது, ​​மாணவனை கட்டையால் அடித்தாகவும், அதில் சிறுவன் மயங்கி விழுந்ததாகவும் கூறினர்.

மேலும் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு SC/ST சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

author avatar
Varathalakshmi

Leave a Comment