விநாயகர் சிலை கரைக்கும் பொது நீரில் மூழ்கி 7 குழந்தைகள் பலி!!

உத்தரபிரதேசத்தில் கங்கை நதியில் விநாயகர் சிலை கரைக்கும் போது 3 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் உள்ள கங்கை நதியில் விநாயகர் சிலைகளை கரைக்கச் சென்ற மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை(செப் 9) இச்சம்பவம் நடந்துள்ளது.

மேலும் இதே போல் சந்த் கபீர் நகரில் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது ஆமி ஆற்றில் மூழ்கி 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment