தனது நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்திய 38 வயது நபர்!!

உத்தர பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கடடாமில் உள்ள ஷீத்லா தாம் கோயிலில் இன்று ஒருவர் தனது நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கௌசாம்பி பகுதியைச் சேர்ந்த சம்பத் (38) என்ற பக்தர், அவரது மனைவி பன்னோ தேவி ஆகியோர் கங்கை நதியில் நீராடிவிட்டு கோயிலுக்கு வந்தனர். கோவிலின் பரிகாரத்தை சுற்றி முடித்த பிறகு, அவர் தனது நாக்கை பிளேடால் அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினார். அவர் தற்போது சிகிச்சைக்காக மஞ்சன்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கர்ஹா தாம் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அபிலாஷ் திவாரி கூறினார்.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment