உ.பி.யில் பயங்கர தீ விபத்து.. 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!

உ.பி.யில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் பலி மற்றும் 64 பேர் காயம்.

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 64 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் அடங்குவர் எனபதோஹி டிஎம் கவுரங் ரதி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பதோஹி எஸ்பி அனில் குமார் கூறுகையில், பந்தலில் ஆரத்தி செய்து கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டதாகவும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

author avatar
Varathalakshmi

Leave a Comment