எல்லா நாடுகளும் ஒரே மாதிரியான உறவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை – ஆஸ்திரேலியா உயர் கமிஷனர்

கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து இதுவரை 3.3 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு  சென்றதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், போர் நிறுத்தத்திற்கான எந்த முடிவும் எட்டப்படவில்லை. குவாட் நாடுகள் எதிர்ப்பு  உலக நாடுகள் ரஷ்யா, உக்ரைன் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், குவாட் நாடுகளும் … Read more

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 300 டாலரை எட்டும் – ரஷ்யா எச்சரிக்கை!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி முதல் ராணுவ தாக்குதலில் கடுமையாக ஈடுபட்டு, முக்கிய நகரங்களை கைப்பற்றி வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. போர் நாடாகும் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க, மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்ததாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதன்படி, உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக … Read more

ரஷ்யா – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10-ல் துருக்கியில் பேச்சுவார்த்தை.!

ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் ஏற்படாததால், இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால் ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் சந்திப்பு இன்னும் 2 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்றும் ரஷ்ய தூதுக்குழு தற்போது பெலாரஸில் காத்திருப்பதாக ரஷ்ய ஊடகம் தகவல் கூறியுள்ளது. இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10-ல் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் … Read more

#BREAKING: ஒரே அடியாக 17 நாடுகளை தூக்கியது ரஷ்யா!

உக்ரைன் மீது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா நேற்று அறிவித்திருந்தது. போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய … Read more

#BREAKING: உக்ரைன் அதிபருடன் 35 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது. போர் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் செலன்சிகியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் நிலவி வரும் சூழல் … Read more

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் – இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை!

கடந்த 24-ஆம் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதை அடுத்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள், கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, ரஷியா உக்ரைன் உடனான … Read more

வான்வெளி ஏவுகணை தாக்குதல் மூலம் வினிஸ்டா விமான நிலையம் அழிப்பு – உக்ரைன் அதிபர்

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது. இந்த நிலையில், வான்வெளி தாக்குதல் மூலம் உக்ரைனை ரஷ்யா அழித்து வருகிறது. வான்வெளி ஏவுகணை தாக்குதல் மூலம் வினிஸ்டா விமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை? – போர் முடிவுக்கு வருமா?..!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா,உக்ரனுக்குள் நுழைந்து கடந்த சில தினங்களாக உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.குறிப்பாக,தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியை குறி வைத்து மோசமான தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும்,உக்ரைனின் பல பகுதிகளை முழுமையாக ரஷ்ய படைகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனிடையே இரு நாடுகளுக்கும் இடையே பெலாரசில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தீர்வுகள் ஏதும் எட்டப்படாத நிலையில்,மேலும் இரண்டாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, மனிதாபிமான முறையில் … Read more

#BREAKING: மாணவர்கள் வெளியேற வேண்டாம் – இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!

உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. குறிப்பாக உக்ரைனில் உள்ள சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்கள் உயிரை பணயம் வைத்து எல்லை நோக்கி நடந்தே செல்லும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போரின் விளைவாக ஏற்கனவே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்பவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு மாணவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே யாருக்கும் … Read more

#BREAKING: உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக இரண்டு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.  உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள், கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் கிழக்கு பகுதியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதில் சிக்கல் நிலவியது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க போரை நிறுத்த வேண்டும் என்று … Read more