தடுப்பூசி ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததற்கு நன்றி – WHO தலைவர்!

தடுப்பூசி ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததற்கு நன்றி என WHO தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்தியா தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய தொடங்கும் என நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் நாட்டு மக்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 81 கோடிக்கும் அதிகமானோர் நாட்டில் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இது குறித்து … Read more

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஆதரவு அளித்த இந்தியாவுக்கு நன்றி- WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த நிலையில், ஆதரவு அளித்த இந்தியாவுக்கு நன்றி என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதனை கட்டுப்படுத்த உலகளவில் சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரும் தடுப்பூசியினை போட்டுக்கொண்டு … Read more

கொரோனாவிற்கு முடிவு..உலகம் கனவு காண ஆரம்பிக்கட்டும்.. டெட்ரோஸ்..!

தொற்றுநோய் குறித்த ஐ.நா பொதுச் சபையின் முதல் உயர்மட்ட அமர்வில் உரையாற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கொரோனா தடுப்பூசி சோதனைகள் பாசிட்டிவ் முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளதால், கொரோனாவிற்கு முடிவுக்கு வர வேண்டும் என்று உலகம் கனவு காண ஆரம்பிக்கலாம் என்று தெரிவித்தார். மேலும், வைரஸை நாம் அழிக்க முடியும். ஆனால் அதற்கான பாதை ஆபத்தானது மற்றும் நம்பமுடியாதது. கொரோனா காலம் மனிதகுலத்தின் நல்ல மற்றும் கெட்ட பக்கத்தை நமக்குக் காட்டியது. … Read more

“கொரோனா இன்னும் ஓயவில்லை”.. பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கும் நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை!

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா பரவலுக்கு மத்தியில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிப்பது, பேரழிவுக்கான செய்முறையாகும் என எச்சரித்துள்ளார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக, பல நாடுகள் ஊரடங்கில் தளர்வுகள் … Read more

கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறைவில்லை ! – உலக சுகாதார துறை தலைவர் டெட்ரோஸ் அதானோம்

கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறைவில்லை என்று  உலக சுகாதார தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். உலகில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் 3,065,778 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 211,658 உயிரிழந்துள்ளனர். இதில் 923,054 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், உலக சுகாதார தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் உலகில் கொரோனா தொற்றின் … Read more

எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு.! காத்திருக்கும் மோசமான விளைவு.!

கொரோனா வைரஸ் மோசமானது, அதன் விளைவை இனிமே தான் சந்திக்க போகிறோம் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் சுமார் 200 நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் வைரஸில் தாக்கம் குறையாமல் உயர்ந்துகொண்டே … Read more

ஊரடங்கை தளர்த்தும் முன் இந்த 6 விஷயங்களில் கவனம் தேவை – உலக சுகாதார அமைப்பு.!

கொரோனா வைரஸால் உலக முழுவதும் 1,794,641 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொரோனா வைரஸால் 109,920 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411,651 உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பைக்கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கை கொரோனா வைரஸ் ஒழியும் முன் தளர்த்தினால்  மீண்டும் எழுச்சி பெற்று விடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதானாம் கெப்ரியேசஸ் ஜெனிவாவில் கூறுகையில் , கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சில நாடுகள் கொரோனா … Read more

அதிபர் டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த WHO இயக்குநர்.!

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், செய்தியளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்கா அதிபர் ட்ரம்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, உலக சுகாதார அமைப்பு எந்த நாட்டுக்கும் ஆதரவாக செயல்படவில்லை என்றும்  கொரோனா வைரஸை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்துள்ளார்.  நீங்கள் அதிகமான சவப்பெட்டிகளை உங்கள் தோளில் சுமக்க விரும்பவில்லையென்றால், கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என் கூறினார்.  மேலும் இது நெருப்புடன் விளையாடும் விளையாட்டு என்றும் … Read more

கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு- உலக சுகாதார அமைப்பு கவலை

உலகம் முழுவதும் தனது மின்னல் வேகத் தொற்றுக் காரணமாக பொதுமக்களை வாட்டி வதைத்து உயிர்களை காவு வாங்கி வரும் கொடூர கொரோனாவிற்கு உலக நாடுகளே சீர் குலைந்து கிடக்கிறது.இதன் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.அவ்வாறு தற்போது வரை உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.   இதற்கு இடையில் ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் உலக … Read more