சிவகங்கையில் மகாராஷ்டிராவில் இருந்த வந்தவருக்கு கொரோனா உறுதி !

சிவகங்கையில் மகாராஷ்டிராவில் இருந்த வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று கொரோனா தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. இன்று 64 பேர் கொரோனா தொற்றில் … Read more

திருவள்ளூரில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ! மொத்தம் பாதிப்பு 495ஆக உயர்ந்துள்ளது…..!

திருவள்ளூரில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 495ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் இதுவரை 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நேற்று கொரோனா தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. நேற்று … Read more

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ! நாள் ஒன்றுக்கு 35,000 பேர் சாப்பிடும் அளவான தாவரங்கள் நாசம் !

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் நாள் ஒன்றுக்கு 35,000 பேர் சாப்பிடும் அளவான தாவரங்கள் நாசமடைகிறது.  பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானிற்கு கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துப் பயிர்களை நாசம் செய்து வருகிறது. கடந்த 10 நாளாக ராஜஸ்தான் விவசாயிகள் அந்த வெட்டுக்கிளகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  முதலில் எல்லையோர மாவட்டங்களான ஜெய்சல்மீர், பார்மர், ஜோத்பூர் மற்றும் ஜலோரில் உள்ள பயிர்களை நாசம் செய்த நிலையில் தற்போது மேலும் சில மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள்  படையெடுத்துள்ளது. சோளம், கம்பு மற்றும் கால்நடைத் தீவனப் பயிர்களை … Read more

பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது !

பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவிப்பு. நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தற்போது 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கும் வருகின்ற 17ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் 4ம் கட்ட ஊரடங்கும் அமலுக்கு வரும், ஆனால் இது முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அமலில் உள்ள 3ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தொழில்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி … Read more

இரண்டாம் கட்ட மீட்பு பணியில் 30,000 இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் ! – ஹர்தீப் சிங் பூரி

இரண்டாம் கட்ட மீட்பு பணியில் 30,000 இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெறிவித்துள்ளார்.  கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் விதமாக உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில், வெளிநாடு சென்ற இந்தியர்களை மத்திய அரசு சார்பில் கொஞ்சம் கொஞ்சமாக அழைத்து வரப்படுகிறார்கள். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி 14,800 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். … Read more

கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுத்த பிக்பாஸ் காதல் ஜோடி !

கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுத்த பிக்பாஸ் 3 காதல் ஜோடி கவின் மற்றும் லாஸ்லியா .  2019ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 தமிழ் என்ற நிகழ்ச்சியில் முகின், சாண்டி, கவின், லாஸ்லியா, சேரன், கஸ்தூரி சங்கர், வனித்தா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் முதல் இடத்தையும் சாண்டி மாஸ்டர் இரண்டாம் இடத்தையும் பிடித்த வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காதலர்களாக பிரபலமானவர்கள் … Read more

கடலூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்த எண்ணிக்கை 413ஆக உயர்வு !

கடலூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்த எண்ணிக்கை 413ஆக உயர்வு ! தமிழகத்தில் நேற்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கொரோனாவால் 8,718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,227 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2176 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலில் உள்ளது. சென்னையில் நேற்று … Read more

திருவள்ளூரில் கொரேனா பாதிப்பு எண்ணிக்கை 492ஆக உயர்ந்துள்ளது !

திருவள்ளூரில் கொரேனா பாதிப்பு எண்ணிக்கை 492ஆக உயர்ந்துள்ளது ! தமிழகத்தில் நேற்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கொரோனாவால் 8,718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,227 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2176 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலில் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 308 பேருக்கு கொரேனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் … Read more

“இருட்டு அறையில் முரட்டு குத்து” நடிகை யாஷிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் !

“இருட்டு அறையில் முரட்டு குத்து” நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ! யாஷிகா ஆனந்த், இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் “துருவங்கள் பதினாறு” என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இதன்பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து 2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘பிக்பாஸ் 2 தமிழ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாகியுள்ளார். … Read more

கொரோனா தொற்றில்லாத மாவட்டமானது “கோவை” ! – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா தொற்றில்லாத மாவட்டமானது “கோவை” என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரேனா வைரஸின் தொடக்க காலத்தில் கோவை மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கோவை ESI மருத்துவமனையில் 146 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதால் கோவையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 145ஆக உயரிந்துள்ளது. … Read more