அரசியல் கட்சிகளின் பேனரை அகற்ற முடியலனா..!பதவிய ராஜினாமா..செய்துவிட்டு..! அதே கட்சியில் சேர்ந்து விடுங்கள்..!உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்..!!

தமிகத்தில் தற்போது பரவி வரும் கலச்சாரமாக பேனர் உருவாகியுள்ளது.சாலைகளை மறித்து பேனர் வைப்பது,போன்ற மக்களுக்கு இடையூறு தரும் வகையில் பேனர் வைக்கப்படுதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரனைக்கு வந்தது.இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள்  கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பேனர் வைப்பது குறித்து மாநகராட்சியிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.பின்னர் நீதிபதிகள் பேனர் வைக்கின்ற எந்த அரசியல் கட்சியினர் மீதும் மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்க முடிய வில்லை அவ்வாறு இருந்தாலும் பேனர் வைக்கப்படுகின்ற போது ஒவ்வொரு … Read more

திருச்சி மாவட்டத்திற்கு டிச.18 உள்ளூர் விடுமுறை..! அறிவித்தார் ஆட்சியர்..!!

திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட  ஆட்சியர் அறிவித்துள்ளார். திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவனது டிச.18 தேதி நடைபெறுகிறது.இதனால் அன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் அன்றைய நாளில் அம்மாவட்டமே விழா கோலம் பூண்டு கொண்டாடுவது வழக்கம் இந்நிகழ்வை ஒட்டிய டிசம்பர் 18 ஆம் தேதி  திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நடப்பு சாம்பியன்-நம்பர் ஒன்னை அடித்து துவம்சம் செய்த சிந்து..!!கர்ஜனை வெற்றி.!!

உலக பேட்மிட்டன் பைனல்ஸ் தொடரில் நம்பர் ஒன் வீரங்கனையை இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி .வி சிந்து வீழ்த்தி அசத்தியுள்ளார். டாப்-8 வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிட்டன் பைனல்ஸ் தொடர் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டுக்கான போட்டி சீனாவில் குவாங்சோவ் நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பி.வி சிந்து ஏ பிரிவில் இடம்பெற்றார். இந்நிலையில் தற்போது நடப்பு சாம்பியனான ஜப்பான் நாட்டு வீராங்கனை அகானே யமாகுச்சி  மற்றும் நம்பர் … Read more

இந்தியன் 2 பிறகு சினிமாவில் இருந்து விடைபெறுகிறேன்…!கலங்கிய கமல்..!!!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இந்தியன் 2  திரைப்படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து  விடைபெறுவேன் என்று தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்ற கமல்  நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் எங்களுடைய மக்கள் நீதி மய்யம் கட்சி மேற்கொண்டு வரும் பணிகளுக்கு இடையே  இந்தியன் 2 விலும் கவனம் செலுத்தி வருகிறேன். இது தான் என்னுடைய திரையுலகப் பயணத்தில் கடைசிப் படமாக இருக்கும்.இனி … Read more

திரையுலகிற்கு என்ட்ரீ கொடுத்த நடிகை ஜெனிலியா…!!நடித்த படத்தின் பாடல் வீடியோ உள்ளே..!!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்திந் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.நடிகர் விஜயுடன் சச்சின், வேலாயுதம் சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பல படங்களில் நடித்த அவர் பாலிவுட்டில்  சில படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த  2012-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தன் திருமணத்திற்கு பிறகு திரையுலகிலிருந்து சற்று விலகியே இருந்தார். இந்த காதல் ஜோடி தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.இந்நிலையில் 4 ஆண்டுகள் திரை இடைவெளிக்குப் … Read more

கஜாபுயல் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது…!கமல் வேதனை..!!

கஜா புயலால் நாகை,தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகிய நிலையில் மக்கள் அடிப்படை தேவையின்றி தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி கரம் நீட்டி வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதிமையத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று மீண்டும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் புயல் பாதித்த மக்களை சந்தித்தார்.அவர்களின் குறைகளையும் அடிப்படை தேவைகளையும் கேட்டறிந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் நிவாரணத்தொகையை கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது  என்று தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டர் … Read more

பந்த் மீது நம்பிக்கை கொண்டோம்…..ஆனால் பந்த் அவுட்…..ஆட்டத்தையே மாற்றியது…!!விராட்..!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. போட்டியின் நடுவே மழை குறுக்கீட்டதால் ஆட்டம் தடைபட்டது.இதனால் இந்தியாவிற்கு 17 ஓவரில் 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி இலக்கோடு களமிரங்கிய இந்திய தொடக்க பேட்ஸ்மேன் தவான் 42 பந்தில் 76 ரன்கள் குவித்த போதிலும் ரோகித் சர்மா (7), லோகேஷ் ராகுல் … Read more

கஜா பாதிப்பிற்கு கரம் கொடுக்கும் என்எல்சி….3 கோடி நிதி அறிவிப்பு…!!!

கஜாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.மக்கள் தண்ணீர்,உணவு,என தங்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு தவித்து வருகின்றனர்.இந்நிலையில் தவித்து வரும் மக்களுக்கு மற்ற மாவட்டத்தை சேர்ந்த மக்களும், நடிகர்களும், இளைஞர்களும், அரசியல் கட்சிகளும் உதவிகரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது கஜா புயல் நிவாரண நிதிக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.3கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் என்எல்சி நிறுவன ஊழியர்களின் ஒருநாள் சம்பளமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. DINASUVADU

கஜா புயல் பாதிப்புக்கு ரூ.1 கோடி நிவரணம்…….கரம் கொடுக்கும் லைகா……!!

கஜா புயல்  ரூ.1 கோடி நிவாரண நிதியை லைகா தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ளது. கத்தி மற்றும் தற்போது வெளியாக ரெடியாக இருக்கும் 2.0 உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தற்போது கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மிகப்பெரிய ஒரு தொகையை அறிவித்துள்ளது. தமிழகத்தை மிரட்டிய கஜா பலத்த சேதத்தை ஏற்படுத்திய இந்த கஜாவால் மக்கள் வீடுகள் மற்றும் தங்கள் வாழ்வதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு மக்கள் ,இளைஞர்கள், நடிகர்கள் … Read more

படத்தின் வசூலை கஜா புயலின் பாதிப்புக்கு வழங்கிய சர்கார்…!!!

நடிகர் விஜய் முருகதாஸ் கூட்டணியில் மாபெரும் வெற்றிப்பெற்ற சர்கார் தீபாவளிக்கு வந்தது.இன்னமும் கணிசமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.வசூலில் அசுரவேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை மிரட்டி தாக்கிய புயல் கஜா .இந்த புயலால் 4 மாவட்ட மக்கள் உட்பட தமிழகத்தில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் 40 லட்ச நிதி உதவியை  தன் மக்கள் இயக்கம் மூலம்  … Read more