மக்கள் எச்சரிக்கையாக, பாதுகாப்பாக இருக்கவே பந்த் நடைபெற இருக்கிறது.! தமிழிசை விளக்கம்.!

பந்த் என்பது போராட்ட வழிமுறைகளில் ஒன்று. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஆட்சியின் மீதான  எதிர்ப்பை தெரிவிக்கவும் நடத்துவது தான் பந்த். – தமிழிசை சவுந்தரராஜன்.  கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆளும் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பில் வரும் 31ஆம் தேதி கோவை மாநகரில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் பாஜக தமிழக தலைவரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான … Read more

தெலுங்கானா ஆளுநராக 3 ஆண்டுகள் நிறைவு.! புத்தக கண்காட்சியில் பங்கேற்ற தமிழிசை.!

தமிழகத்தில் நான் மூக்கையும் நுழைப்பேன், வாயையும் நுழைப்பேன். வாலையும் நுழைப்பேன். காலையும் வைப்பேன். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என தமிழிசை சவுந்தராஜன் பேசினார்.  தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுசேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்துவ வருகிறார். இதில், தெலுங்கானா ஆளுநராக அவர் பதவியேற்று இன்றோடு மூன்றாண்டுகள் ஆகிறது. அதனை குறிப்பிடும் வகையில், புத்தக கண்காட்சி நடைபெற்றது. அதில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் … Read more

மனு என்ற பெயரை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது -தமிழிசை செளந்தரராஜன்

பசுவின் கன்றை கொன்றதால் தனது மகனையே தேர்க்காலில் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி நமது தமிழகம் என்பதில் பெருமை என ஆளுநர் தமிழிசை பேச்சு. புதுச்சேரியின் காரைக்கால் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக நீதித் துறை குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற கட்டடத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் தமிழிசை, ஏழை எளியோருக்கு மருத்துவம் கிடைப்பது … Read more

அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் பேசுவதாக ஆளுநர் வேதனை..!

அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் இரு மாநிலத்திற்கு ஆளுநர் என பேசியுள்ளார் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கருதத்தரங்கை  தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், யாரையாவது திட்டுவதாக இருந்தால் கூட அழகு தமிழில் மரியாதையாக திட்டுங்கள். அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் இரு மாநிலத்திற்கு ஆளுநர் எனபேசியுள்ளார். இரண்டு … Read more

மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணியக் கூடாது-தமிழிசை சவுந்தரராஜன்..!

மகளிர் தினவிழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பெண்கள் பொது வெளியில் நாகரீகமான உடைகளை அணிவது அவசியம். உடைகளில் கட்டுபாடு இருக்க வேண்டும். கண்டபடி மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணியக் கூடாது. பெண்கள் நாகரிக உடைகள் உடுத்துவதில் கவனம் தேவை. பெண்ணுரிமையை தவறாக பயன்படுத்துகிறோம். கண்டமேனிக்கு உடை உடுத்துவது தான் பெண்ணுரிமை என நினைக்கிறார்கள். நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் உள்ளது. உடையில் ஒரு கட்டுபாடு இருக்க … Read more

#Helicopter Crash:”நெஞ்சம் அடைக்கிறது;இதயம் நொறுங்கி விட்டது” – தெலுங்கானா ஆளுநர் நேரில் அஞ்சலி!

நீலகிரி:ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது,வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் … Read more

ஆளுநருடன் புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு..!

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் பாஜக எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் யார் தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. மாநிலங்களவைத் தேர்தலில் ஆளும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே தொடர் இழுபறி நீடித்து வருகிறது. … Read more

ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவு – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இரங்கல்!

எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் என தமிழிசை சவுந்தராஜன் இரங்கல். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், அதிமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்றும், செய்தி வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது … Read more

ட்விட்டர் மூலம் உதவி கேட்ட பெண்ணுக்கு விரைந்து உதவி கரம் நீட்டிய ஆளுநர் தமிழிசை..! குவியும் பாராட்டு…!

ட்விட்டர் மூலம் உதவி கேட்ட பெண்ணுக்கு விரைந்து உதவி கரம் நீட்டிய ஆளுநர் தமிழிசை.  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காலமானதை அடுத்து அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் சௌந்தர்ராஜன் அவர்கள், சென்னை வந்தார்.  இதனையடுத்து, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் இரவு வென்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை தேவைப்பட்டது. இதனையடுத்து அந்த … Read more

பிரதமர் மோடியுடன் தெலுங்கானா ஆளுநர் சந்திப்பு..!

பிரதமர் மோடியுடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக செயல்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியுடன் … Read more