டி20யில் 500 விக்கெட்டை கடந்த பராசக்தி எக்ஸ்பிரஸ்..!

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வலது கை சூழல் பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் தற்போது டி20களில் மட்டும் 500 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். டுவைன் பிராவோ, ரஷீத் கான், சுனில் நரேனை தொடர்ந்து இம்ரான் தாஹிரும் இந்த பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளார். இம்ரான் தாஹிர் தற்போது பங்ளாதேஸ் பிரீமியர் லீக் (BBL) இல் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடந்த போட்டியின் போது ரங்பூர் ரைடர்ஸ் அணியை எதிர்த்து குல்னா டைகர்ஸ் அணி … Read more

நான் எதை தவறவிட்டேன்? ஒரே நாளில் 23 விக்கெட்… நம்ப முடியவில்லை – சச்சின் ஆச்சிரியம்

Sachin Tendulkar

தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 23.2 ஓவரில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், முகமது சிராஜ் மட்டுமே … Read more

தென்னாப்பிரிக்காவால் அவமானப்படுத்தப்பட்ட நியூசிலாந்து- ஸ்டீவ் வாக் ஆவேசம்..!

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கோரிக்கை விடுத்துள்ளார். தென்னாப்பிரிக்கா தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்தது. நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான புதிய அணியை தென் ஆப்பிரிக்கா தேர்வு செய்துள்ளது. தொலைந்து போன முக்கிய பொருள்.. வார்னருக்கு நடந்த சோகம்..! தென் ஆப்பிரிக்கா தேர்வு செய்த 14 பேரில் … Read more

இஸ்ரேலுக்கு எதிராக இனப்படுகொலை வழக்கு தொடர்ந்த தென்னாப்பிரிக்கா!

south africa - israel

அக்டோபர் மாதம் 6ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர் . ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பிணை கைதிகளாக பலர் கடத்தி செல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் காஸாவில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்துவருவதாக … Read more

புஜாராவை விட சிறந்த வீரர் இருக்காங்களா? கொந்தளித்த ஹர்பஜன் சிங்!

harbhajan singh about pujara

செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வி பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சித்து பேசி வருகிறார்கள். குறிப்பாக நேற்று சுனில் கவாஸ்கர் விமர்சித்து பேசி இருந்தார். அவரை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். இது … Read more

தவறு நடந்ததில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்! ரோஹித் ஷர்மா பேச்சு!

rohit sharma speech

செஞ்சூரியன் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கேப்டன் ரோஹித் ஷர்மா முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுலின் அபார சதத்தை பாராட்டியும் தோல்வி பற்றியும் பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கே.எல்.ராகுல் அடித்த சதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய அணியில் தொடர்ச்சியாக விக்கெட்கள் விழுந்த சமயத்தில் அவர் மட்டும் நிதானமாக விளையாடினார். அவரிடம் இருந்து நாம் இதனை தான் கற்றுக்கொள்ளவேண்டும். அந்த அளவிற்கு அவர் நிதானமாக விளையாடினார். ஒவ்வொரு தனி … Read more

பயிற்சி முக்கியம்! இந்தியா தோல்வி குறித்து விமர்சித்து பேசிய சுனில் கவாஸ்கர்!

sunil gavaskar

இந்தியா – தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் இந்தியா அணி  245 மற்றும் 131 ரன்களை எடுத்தது, அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா தனது ஒரே இன்னிங்ஸில் 408 ரன்களை குவித்தது.இதன் மூலம் தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில் தோல்வியை பற்றி … Read more

தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச தேர்வு செய்தது. முதலில் இறங்கிய இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101, விராட் கோலி 38, ஷ்ரேயாஸ் ஐயர் 31, ஷர்துல் ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணியில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 5 விக்கெட்டையும், நந்த்ரே பெர்கர் 3  … Read more

SAvIND:முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் முன்னிலையில் தென்னாபிரிக்கா ..!

தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் இறங்கிய  இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 67.4 ஓவருக்கு 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101, விராட் கோலி 38, ஷ்ரேயாஸ் ஐயர் 31, ஷர்துல் தாக்கூர் 24 ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணியில் ககிசோ ரபாடா 5 … Read more

SAVIND: 2-ஆம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா 11 ரன்கள் முன்னிலை..!

முதல் நாள் ஆட்ட முடிவில்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட்  போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டி நேற்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி முதல் நாள் முடிவில் 59 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் எடுத்தனர். களத்தில் முகமது சிராஜ் ரன் எடுக்காமலும், கேஎல் ராகுல் … Read more